Pages

Thursday, December 30, 2010

புத்தாண்டை கொண்டாடுவோம் கத்ரீனாவுடன் ...[:-)

என்ன பதிவு போடலாம் என்று யோசித்து யோசித்து மண்டை வீங்கியதுதான் மிச்சம்
நண்பனிடம் கூறினால்" b +ve "என்கிறான் என்னடா சொல்றன்னு கேட்டா

தெளிவா சொல்றான்னு சொன்னா "think possitive " என்ன போடலாம்னு யோசிக்காம எதாவது போடணும்னு யோசின்னு சொன்னான்

சரி அதையே ஒரு பதிவா  போடலாம்னு முடிவு பண்ணி ஒரு வடிவம் கொடுத்திருக்கிறேன் ...

சரி இத மட்டும் சொன்னா போதுமா ?

இல்ல ரெண்டு நாள்ள புது வருடம் பிறக்க போகுது சரி இதுதான் வாழ்த்த  சரியான நேரம்னு இந்த பதிவுல என் புதுவருட வாழ்த்த எப்படி சொல்லலாம்னு யோசிச்சப்ப

நம் பதிவுகல்கிர்க்கு
உச்சத்தில் புகழுடன் திகழும் அணைத்து பதிவரசர்களுக்கும்
கம்மண்டே வராத பழைய பதிவுகளை மறந்து
புதிய பதிவை புதிய பொலிவுடன் பிரதிபலிக்க முயற்சி செய்யும்
புதிய பதிவர்களுக்கும் என் புதிய பதிவுடன் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!


பிறகு நம் பதிவர்களுக்காக ஒரு சிறிய பாடலையும் இணைத்திருக்கிறேன் புடிச்சா இன்ட்லில ஒரு குத்து குத்துங்க :)

[அட எனக்காக இல்லனாலும் பரவில்ல மேடம்காகவாச்ச்சும் ஒரு கமெண்ட் போடுங்க :) ]


இந்த காட்சியை பார்த்து கொஞ்சம் சிரிச்சிகிட்டே கமெண்ட் போடுங்க :)




அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

1 )சைவம்


அணைத்து துயரங்களையும் மறந்து
சந்தோஷமாய்  கொண்டாட என் வாழ்த்துக்கள் :)

2 )அசைவம்   


இந்த புத்தாண்டை குடியும் கூத்துமாய் சந்தோசமாய் கொண்டாட என் வாழ்த்துக்கள்


கடைசியா என்னோட  இந்த தலைப்புக்காக ஒரு படம் :)




think possitive

Sunday, December 12, 2010

டிக்கெட் டிக்கெட் .....


இந்த பதிவில்  பேருந்தில் நான் சந்தித்த அனுபவங்களையும் கேட்ட செய்திகளையும் உங்களிடம் பகிர்கிறேன் .......


சாதாரணமாக டிக்கெட் கொடுக்கும் நடத்துனர் கூட்டமாக இருந்தாலும் கூட்டம் இல்லாவிட்டாலும் அனைவரிடத்திலும் சென்று டிக்கெட் கொடுக்கும் வழக்கம் மறைந்தே போய்விட்டது .. குறிப்பாக சென்னையில் மற்ற ஊர்களில் கூட இப்படி இல்லை .

அவருக்கு ஒதுக்கப்பட்ட சீட்டை விட்டு அவர் நகருவதே இல்லை அனைவரிடத்திலும் சென்று டிக்கெட் கொடுக்கும் நடத்துனர் மிகவும் சிலரே உள்ளனர் .

ஆனால் மீதம்மிருக்கும் நடத்துனர்களால் எல்லார் மேலும் ஒரு வெறுப்பு வருகிறது .

கூட்டமா இருக்கு அப்டியே பாஸ் பண்ணுங்கன்னு சொல்லிட்டு உக்காந்திருப்பார் பயணிகளும் வேறு வழியின்றி பணத்தை கொடுத்து டிக்கெட்டை வாங்கிகொல்கிறார்கள்.
 
சில சமயம் டிக்கெட் வரும் சில்லறை வருவது இல்லை 
சில சமயம்  சில்லறையா கொடு இல்ல அடுத்த நிறுத்தத்துல இறங்கிக்கோன்னு  சொல்லிடுறாங்க அந்த அளவுக்கு அவங்களுக்கு பயணிகள் மேல வெறுப்பா ?

ஆனா பல சமயங்கள்ல இதுக்கு பயணிகளும் ஒரு காரணமா இருக்காங்க நடத்துனர்கள் உட்காந்திருந்தா அவங்க கிட்டயே போய் டிக்கெட் வாங்கிட்டு வாரங்க !
சரி அவங்களும் எவ்ளோ நேரம்தான் நடபாங்கன்னு நினைக்கலாம் ஆனா வேலைநேரம் முழக்க உகார்ந்தே  வேலை செய்ய அவுங்க ஏன் நடத்துனர் வேலைக்கு வரணும் ?

சமீபத்தில் படித்த ஒரு சம்பவம் :
ஒரு பள்ளிச்சிறுவன் பேருந்தில் முன் பக்கத்தில் ஏறியிருக்கிறான் பேருந்து கூட்டமாக இருந்ததுனால நடத்துனர் வருவார்ன்னு காத்திருக்க அடுத்த நிறுத்தத்துல பரிசோதகர் எறியிருக்கார் இவனிடம் டிக்கெட் இல்லை . அவன் சிறுவன் என்றும் பார்க்காமல் அவனை உலுக்கி இருக்கிறார்கள் அவன் நடத்துனர் வருவார்ன்னு இருந்தேன் அவர் வரல என்கிட்டே பணம் இருக்குன்னு சொல்லி காட்டின பிறகும் அவர்கள் அவனை அந்த கூட்டத்துலயும் சட்டைப்பையில் துலாவி இருக்கிறார்கள் பிறகு ஒன்னும் "தேராததால்"  திட்டி விட்டு சென்றுவிட்டனர்  பிறகு நடத்துனர் வந்து அவர் பங்குக்கு நாலு திட்டு திட்டிவிட்டு  டிக்கெட் கொடுத்து செல்ல அவன் கூனி குறுகி அழுதுகொண்டே சென்றிருக்கிறான் .

அவர்களுக்குள்ளயே பல சங்கங்களாக இருகிறார்கள் , அதிலும் திமுக மற்றும் ஆதிமுக என இரு சங்கங்கள் போன மாதம் போக்குவரத்து கழகதுகுள்ளயே தேர்தல் போல் வைத்து உறுபினர்களை தேர்ந்தெடுத்தார்கள் அதில் தவறில்லை ஆனால் அந்த பரபரப்பில் பேருந்தை ஒரு சிலமணிநேரம் இயக்கவில்லை இதனால் பல பயணிகள் வேறு வழியின்றி ஆடோவிலும் லாரியிலும் சென்றனர் .

கேட்பதற்கு ஆள் இல்லாமல் ,இது போல் தினம் தினம் பல சம்பவங்கள் நடக்கிறது .
 மக்களின் நிலை ஒரு குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டுள்ளது அதிலும் ஒவ்வொரு
துறையினரும் விளையாடுகிறார்கள் .

இது போல் பல ரணங்களை சந்திக்கும் மக்களின் நிலை


                                                                    ?


இங்கு உங்களுடன் பகிர்ந்த அனைத்தும் எனது அனுபவங்கள் மட்டும்தான் ..

பிடித்திருந்தால் இன்ட்லியிடம் சொல்லுங்கள் பிடிக்கலன்னா  பின்னூட்டத்துல சொல்லுங்க மறக்காம !

Thursday, October 28, 2010

பயடேட்டா

ஏங்க நீங்களே கேளுங்க, குத்தாலத்தானுக்கு செமஸ்டர் வந்துட்டாம் அதனால ஒரு ரெண்டு மாசத்துக்கு ட்விட்ட மாட்டானாம்,யார் பதிவும் படிக்க மாட்டானாம், கேட்டா சின்சியரா படிக்கிறானாமா(உன்னய பத்தி எனக்கு தெரியும்டி)

தீபாவளிக்குகூட ஊருக்கு வந்து கொண்டாடமாட்டானாம், ஏண்டான்னு கேட்டா இந்த முறை பரிட்சையே தீபாவளியா கொண்டாவேங்கிறான்(முடியலடா சாமீ)

சரி அவன் தான் இந்த பக்கம் வரமாட்டேனே, அவன பத்தி புட்டு புட்டு வக்கிறேன் கேளுங்க :)


உண்மையான பெயர்     :     பிரபாகரன்(விடுதலை புலி இல்ல)

வயசு                                     :        வாலிப வயசு 21

தற்போதைய தொழில்       :  பொறியியல் படிப்பை கருமமே கண்ணாக
                                                        படிப்பது(மச்சி படிக்கிற தானே)

பொழுதுபோக்கு                   :      இணையத்தோடு இனைந்தே இருப்பது,                                                                                     என்னோடும்   நண்பர்களோடும் மொக்கை                                                                             போடுவது

நண்பர்கள்                               :        என்னையும் சேத்து ஒரு ஆயிரம் பேராவது                                                                           இருப்பாங்க

எதிரிகள்                                  :        பூச்சிகள்(உன்னைய கடிக்காத பூச்சே                                                                                        இல்லல்ல   மாமா )

ஊருக்குள்                              :        நான் அவன் இல்ல


ரொம்ப பிடித்தது                  :         சோனி எரிக்சன் மொபைலும் வகை                                                                                             வகையாய்   டீ-சர்ட்டுகளும்

பிடிக்காதது                              :         சீன் போடுவது,உண்மையையே                                                                                                 பேசுவது(இது   உண்மை இல்லீங்கோ)

அடிக்கடி செய்வது               :       தன்னையே வித்யாசம் வித்யாசமாக போட்டோ                                                                 எடுப்பது

இதுவரை செய்யாதது         :      செய்யாத தில்லாலங்கடியே இல்ல

செய்ய நினைப்பது                :       ஊருக்கு எதாவது நல்லது செய்யனும்னு                                                                               நினைக்கிற நல்ல மனசு

சமீபத்திய சாதனை              :       சுழிய  சுருட்டிகிட்டு படிக்க உட்கார்ந்திருப்பது                                                                       (படிக்க புத்தகத்த எடுத்துட்டான் அடுத்த ப்ளான்                                                                   புத்தகத்த திறக்கனும்)

நீண்டகால சாதனை          :        ஊருக்குள் நல்லவன் போலவே நடமாடுவது

வருங்கால சாதனை          :         மச்சி இந்த மைக்ரோசாஃப்ட்,கூகுள் போன்ற                                                                         சின்ன கம்பெனிகளை ஓரங்கட்ட ஒரு பெரிய                                                                       கம்பெனி நீதான் ஆரம்பிக்கனும்டா

பெண்கள்                      :                  எல்லா இளம் பெண்களும் இவனுக்கு அக்கா                                                                          தங்கச்சி  மாதிரி(மச்சான் எப்புடி)

காதல்                                    :         வந்துச்சி ஆனா போகல (என்ன வாந்தியா)

கவிதை                                 :         இவன் கிறுக்குறது கூட கவித                                                                                  ( கழுத இல்ல கவித கவித )

ஏமாந்தது                               :         ட்விட்டர் மீட்டுக்கு சென்று வேடிக்கை பார்த்து ஏமாந்தது

புதுசு                                       :    டெல் லேப்டாப்

பழசு                                       :     பழசையெல்லாம் தூர போட்டுட்டு எல்லாம்                                                                           புதுசுதான் (எல்லாமே தான்)

கடைசியா  உனக்கு         :     மச்சி நீ கேளேன் , நீ கேளேன்



                                    

Sunday, October 17, 2010

நான் பார்த்து மிரண்டு போன நிழற்படங்கள் !!



என்ன ஒரு ரௌடித்தனம் :)





இந்த உடம்பு இதையெல்லாம் தங்குமா ?





டைம் போகலைன்னா இப்டியெல்லாம் யோசிப்பாங்களா ?




ஆஹா அப்துல்கலாம் கண்ட வல்லரசு கனவு சீக்கிரமே நடக்க போகிறது ! :)





இத அடிச்சு முடிச்ச உடனே அவருக்கு கான்செர் வந்துரும்ன்னு நெனைக்கிறேன் என்ன சொல்றீங்க ?

Wednesday, October 13, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்- அரசுக்கு வேண்டுகோள்





சிதறாமல் அமர்வாரா ஜைனர்?

ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்டஆளுருட்டி மலை
 
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்
 
தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in
 
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு  செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன் 
ஆரூரன் விசுவநாதன்
 
நண்பர் ஆருரான் வேண்டுகோளுக்கு இணங்க மீள் பதிவு....
 
To
The Collector,
Pudukottai Dist.
 
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.

Sunday, October 10, 2010

சரக்கு அடிக்கலாம் வாங்க !

நம்ம பசங்க என்னக்கி சரக்கு அடிச்சாலும் ஒரு காரணம் இல்லாம அடிக்க மாட்டாங்க !
என் நண்பர்கள் சரக்கு அடித்த சில கரணங்கள் !!

*போன வருடம்  விபத்தில் இறந்த ஆந்திர முதல்வருக்காக சரக்கடிதனர் !

* நண்பன் 1 :மச்சி அவ திட்டிட்டா  டா....
நண்பன் 2 : சரி வா சரக்கடிக்கலாம் :)

*எங்க கல்லூரி முதல்வரின் தாயார் இறந்ததற்கு :(

*எங்க வகுப்புல ஒரு பத்து பேருக்கு அபராதம் போட்டதற்கு :|


*பாஸ் ஆனா சந்தோஷ சரக்கு இல்லனா  துக்க சரக்கு ..:)

*புது கைபேசி வாங்குனா சரக்கு தொலைஞ்சு போனாலும் தான் ...,


*பரிச்சை முடிஞ்சா சரக்கு ,


*வாரக் கடைசி  நாள் சரக்கு ,


* பிறந்தநாள் சரக்கு ,

*சளி புடிச்சாகூட சரக்கு  
கேட்டா ரம் அடிச்சா சளி போயிருமாம் :|


  இப்டி எவ்ளோவோ சொல்லிக்கிட்டு  போகலாம் ஆனா என்ன காரணத்துக்காக சரக்கு அடிச்சாலும் அவுனுங்க பேசறது இந்த விஷயம்தான் இருக்கும் !

*நீ ரொம்ப நல்லவன் டா மாப்ள :)  (வாங்கி தர மாட்டேன்னு சும்மா சொன்னதுக்கு வண்ட வண்டையா கேட்டியே  டா )

*டேய்  சரக்குல இருக்கேன்னு நெனைக்காத நானே வண்டி ஓட்டுறேன் :|(வேணாம் டா வண்டி என்னுது  :( )

*ஏன் மச்சி இன்னக்கி எவ்ளோ அடிச்சாலும் ஏற மாட்டுது (டேய் அவன் பக்கத்துல இருக்குற சோடா பாட்டல எடுரா நாய் சோடா மட்டும் குடிச்சுட்டு எரலன்னு மொக்க போடுது :)

*நான் போதைல ஒளர்ரெண்ணு நினைக்காத டா  எப்போதுமே போதைல இருக்குறவன் தான் உண்மைய பேசுவான்
(அய்யே சொல்லிடாரு அரிச்சந்திரன் தம்பி ! ஓடி போயிரு டா அடி வாங்கம )

*மச்சி இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும் டா !
(உங்க மாமனார் கடையா  மச்சி ! )

*மச்சி எடுத்துக்கோ என் உயிரே உனக்குத்தான், உனக்காக என்ன வேணும்னாலும் கொடுப்பேன் டா (நீ அடிச்ச சரக்குகே நான்தான் கொடுக்க போறேன் கொய்யால பேச்சை கொறடா வந்துடாரு அம்பானி பேரன் )

*மச்சி என்னடா இது சரக்கு, நாளைலேந்து சரக்கே அடிக்க கூடாது டா (அடப்பாவி போன வாரமும் இதத்தான சொன்ன )

*இருந்தாலும் அவ அப்டி சொல்லியிருக்க  கூடாது டா ! புடிகிலன்ன விட வேண்டியதுதான அசிங்க படுத்திட்டா மச்சி (டேய் நீ லவ் சொல்லி 3  வருஷம் ஆகுதுடா )


அதுவும் இவணுங்க அடிச்சிட்டு பண்ற அலும்பு இருக்கே தாங்க முடியாது ....
ஓம்லெட் போட்டுட்டு டார்ச்சர் பண்ணிருவானுங்க !
அவன் சந்தோசத்துக்கும் துக்கத்துக்கும் பக்கத்துல இருக்குரவந்தான்  கரணம் மாதிரி பேசுவானுங்க '
புதுசா வந்து சரக்கு அடிச்சுட்டு அதுவும் 2  கட்டிங் அடிச்சுட்டு  ஒரு புல் அடிச்சா மாதிரி  சீன் விடுவானுங்க  !

ஒன்னு நம்மளும் சரக்கு அடிக்கணும் இல்லனா சரக்கு அடிகிரவன் கூட போக கூடாது !

நம்ம நாட்ல நஷ்டம் இல்லாத வியாபாரம் சரக்கும் , கல்வியும்தான் ரெண்டுலயும் அள்ளுராங்க !
 







சரி நான் சரக்கு அடிக்க போறேன் !(போன பதிவுல யாருமே இண்ட்லில  ஓட்டுப்போடலை அதுக்காகதான் :(  )
அடுத்த பதிவுல பாப்போம் !

சரக்கு பத்தி பதிவு போட்டதும் படிச்சுட்டு கேளம்பிடதீங்க கமெண்ட் போடுங்க அப்புறம் இந்த பதிவு எல்லா குடிமக்களுக்கும் சேரனும் அதுக்காக வோட் போடுங்க :) அப்பத்தான் சந்தோசமா சரக்கு அடிக்க முடியும் !! :)

Saturday, October 9, 2010

101010-ஒரு நாள் மந்திரன்

நேத்து எந்திரன் பாத்தேன் ஆனா அதுக்கு முன்னாடி இங்க நிறைய பேரோட பதிவ படிச்சேன் நல்லவேளை நான் படம் பாக்கும்போது அதெல்லாம் நினைவுக்கு வரல ! :)

ஆனா எந்திரன்க்கு எதிர்மறை பதிவு போட்டு நல்லா ஹிட்ஸ் வாங்குனாங்க !
அவுங்க எல்லாரோட பதிவுலயும் காலநதி மாறன் , சன் பிக்சர்ஸ் மேல  இருக்கும் கோவத்தை கட்டுறாங்கன்னு தெளிவா தெரியுது அத  ஏன் படத்து மேல கட்டுனாங்கன்னு புரியல ! அதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற அளவுக்கு நான் இன்னும் வளரல :) .  நானும் ஒத்துகிறேன்
 டீவீல அவுனுங்க பண்ணுறது கொஞ்சம் ஓவர்தான் ஆனா படத்துல  குறை சொல்ல முடியாது ! சில பேர்  எதிர்மறை பதிவு ஹிட்சுகாக போடுறதையும் சில பேர்  சன் பிக்சர்ஸ்க்காக போடுறதையும் தெளிவா பாக்க முடியுது !
  

சரி அத விடுங்க எனக்கு படம் புடிச்சிருக்கு . நேத்து எந்திரன் பாக்குறதுக்கு  முன்னாடியே நான் மந்திரன் பாத்தேன்
இங்க எதனை பேர் போரூர் பக்கம் போனீங்கன்னு தெரியல போனா பாத்திருக்கலாம் !
போனா வாரம் புதன் கிழமை மாலை போருர்ல பேருந்துக்கு நின்னபோ என்னையறியாம ஒரு பெரிய சைஸ் கட்அவுட் என்ன கவர்ந்துச்சு "அது என்னன்னா நம்ம தளபதி அதான்பா நம்ம துணை முதலமைச்சர் அவுரோட கட்அவுட்தான் அது" செம காமெடி பாஸ் !

எந்திரன் பட ரஜினி ஸ்டில்ல போட்டோஷாப்ல மாத்தி தளபதி  போட்டோவ போட்டு இருந்தாங்க ! உடனே எடுத்துடோம்ல  கிளிக்கு :)

இத அவரே பாத்துட்டு கடுப்பாகி எடுக்க சொல்லிருப்பார்ன்னு நினைக்கிறேன் அடுத்தநாளே இந்த ஒரு கட்அவுட் மட்டும் காணமல்போச்சு !! நமக்கு ஒரு மேட்டர் மாட்டுச்சு அது போதும் !!:)



அப்புறம் இன்னக்கி என் நண்பனோட பிறந்தநாள்    !


போன வருஷம் ரொம்ப சிறப்ப கொண்டாடினோம் ஆனா இந்த வருஷம் சில காரணங்களால் சிறுசா கொண்டாடபோறோம் !  என் பிறந்தநாள் வாழ்த்த முதல் முறையா பதிவுமூலமா தெரிவிக்கிறேன் :)
அவனுக்காகதான் பதிவின் பெயரில்  நம்பர் !  

அப்புறம் சில கமெண்டுகளை பெற்ற என் மொக்கைகளை இங்கு போட்டு உங்களோட கம்மேன்டையும் வாங்கனும்னு ஒரு ஆசை !

* வழிகள் வழிபோக்கனை மறந்தாலும் என் கல்லூரிச்சாலையில் என் பதிவுகள் ஒட்டியிருக்கும் ரத்தமாய் #தடுக்கி விழுந்த நான்

* அவளை விட அழகாகவே கேட்கிறாள் உனக்கு எத்தனை "பெண் தோழிகள்" நீ மட்டும்தான் என்று அவளிடம் கூறியதைவிட தெளிவாக கூறினேன் :)#தங்கை மொழி

* வந்துவிட்டாள் அவளின் தங்கை அவளிடம் பேசிய பழைய கவிதைகளை நினைவுகூரவேண்டும் #தங்கை மொழி வேறென்றாலும் பெண்கள் மொழி ஒன்றுதான்:)

* இன்னும் எவ்வளவு நேரம் அவளிடம் பேசுவது அவள் தங்கை வரும் நேரம் ஆகிவிட்டது :(
அட்டவணை போட்டு பேச வேண்டியுள்ளது #தங்கை மொழி

* அவளை நினைக்கும்போதெல்லாம் மனதில் மன்மத ராகம் ரெண்டாய் கேட்கிறது அவள் தங்கைக்கும் சேர்த்து #தங்கை மொழி

* வண்டியில் குருக்கள் மந்திரம் ஊதிக்கொண்டே போகிறார் கைபேசியில் #கூடிய சீக்கிரம் அவருக்கு திதி ஓத ஆள் தேவைன்னு நினைகிறேன்#வண்டியோட்ட கைபேசி தேவையில்லை

* பாலகாண்டம் நிறைவடைந்து சுந்தரகாண்டம் தொடங்கும் என் நான் நினைத்திருந்தபோதுதான் யுத்தகாண்டம் டிஸ்கோ டான்ஸ் ஆடியது #காண்டபெயற்சி 

* இப்போதெல்லாம் அவள் கண்களை பார்த்தால் கவனம் சிதறுகிறது #தங்கையின் நினைவு

 *  இனி அவளுக்காக நான் எழுதும் குறுஞ்செய்தி அனைத்தும் forward செய்யப்படும் அவள் தங்கைக்கும் #தங்கை மொழி

 

 இன்னும் நிறைய விஷயம் இருக்கு ஆனா இப்போ கொஞ்சம் வேலை இருக்கு அடுத்த பதிவுல பாப்போம் !

நீங்க என்ன நினைச்சாலும் கமெண்ட் போடுங்க !

அத வச்சுதான் அடுத்த பதிவ அப்கிரேட் பண்ண முடியும்.  டாட்

 

 

 

Monday, September 27, 2010

நமீதாக்கு நன்றி !!!

இந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆச்சு ...எழுத நேரம் இல்லன்னு சொல்லமாட்டேன் ஆனா ஏன்னு தெரில !
இனி வாரம் ஒரு பதிவு போடலாம்னு நினைகிறேன் !

இந்த தலைப்புக்கு காரணம் கடைசியா சொல்றேன் :)

போனா வாரம் வீட்டுக்கு போயிருந்தேன் ஒரு கல்யாணத்துக்காக போற வழில நிறைய சுவரொட்டி ஒட்டிருந்தாங்க
கல்யாண மண்டபத்துலேயும் வாழ்த்து அட்டைலாம் கொடுத்து தடபுடலாக இருந்தது ...
இதெல்லாம் அவசியம் செய்யனுமா ?
செய்யக்கூடாதுன்னு நாம போய் சொல்ல வயசில்ல அதான் இங்க கொட்டிட்டேன்

நான் என்ன சொல்றேன்னா இப்ப சுவரொட்டி வாழ்த்து அட்டைகெல்லாம் பண்ணின செலவ வந்தவங்களுக்கு ஒரு மரக்கன்று கொடுக்கலாம் . ஏதோ ஒரு வகைல நாமளும் குளோபல் வார்மிங்கை தடுக்கலாம் . எனக்கு அத பத்தி ரொம்ப தெரியாது ஆனா ஓரளவுக்கு தெரியும் . இது போல மரக்கன்று கொடுக்குற பழக்கம் நடைமுறைல இருக்கு ஆனா நிறைய பேருக்கு தெரியல !

இந்த பதிவு இத நிறைய பேர்கிட்ட கொண்டுபோகும்ன்னு நம்புறேன் . இத படிச்சிட்டு வாய்வழி செய்தியா கூட நிறைய பேருக்கு தெரியவரும் நினைகிறேன் .
அதுவும் நமக்கு உதவுற மாதிரி மரக்கன்று கொடுதோம்னா (கொய்யா,மான்கன்னு,....) வாங்கிட்டு போறவங்க ஒரு ஆர்வத்தோட வளபாங்க . இந்த செடி எல்லாம்  ஒன்னும் அதிக விலையும் கிடையாது . அதனால இந்த செய்திய நாமளும் நமக்கு தெரிஞ்சவங்ககிட்டையும் சொல்லி நடைமுறை படுத்தலாம் .

 ரெண்டு நாளைக்கு முன்னாடி என்  நண்பனுக்கு பிறந்தநாள் அவன் ஒரு சாக்கலேட் மட்டும் கொடுத்தான் நாங்க எல்லாம் சேர்ந்து ட்ரீட் கேட்டோம் முடியாதுன்னு சொல்லிட்டான் அப்புறம் அவன்ட தனியா நான் கேட்டேன் "என்னடா நாம பண்ணாத செலவா பசங்களுக்கு ட்ரீட் கொடுக்கலாம்ல ? " அதுக்கு அவன் இல்ல டா நீயே சொன்ன நாம பண்ணாத செலவான்னு அதுதான் எப்போதும் பன்றோம்ல அதான் இந்த முறை வீட்ல ட்ரீட்டுக்கு கொடுத்த பணத்த ஒரு குழந்தைகள் இல்லத்துக்கு ஒரு  வேலை சாப்பாடுக்கு கொடுத்துட்டேன் .. அவன் சொன்னதும் ட்ரீட் கொடுத்தமாதிரி ஒரு சந்தோசம் ..
வெட்டியா எவ்வளவோ செலவு பண்றோம் ஒரு வேலை சாப்பாடு நமக்கு சாதாரண விஷயமா இருக்கலாம் அந்த குழந்தைகள் இல்லத்துல இருக்குற பசங்களுக்கு அது ஒரு பெரிய விஷயம் தான் ..
எல்லா ஊர்லயும் இது போல பல இல்லம் இருக்கு ........யோசிங்க !!

தலைப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி தெரியும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க நம்ம ஆளுங்க ஷேவிங் கிரீம் கூட விளம்பரத்துல வர நடிகைய பாத்துதான் வாங்குறாங்க ..
அதுமட்டும் இல்ல என்னோட "நான் எடுத்த நமீதா போட்டோ !!! " பதிவு இன்னக்கி வரைக்கும் பேஜ் வீயுஸ்ல முதல் இடமா இருக்கு அதான் அவுங்களுக்கு நன்றி சொல்லி  இந்த பதிவுக்கும் போட்டுட்டேன் !! :)




 இந்த பதிவும் ஹிட்லிஸ்ட்ல முதல் இடம் புடிக்கணும் அப்டி வந்ததுன்னா நான் எழுதுற எல்லா பதிவுக்கும் உங்க பேர்தான் !!!!
சரி சரி படத்த பாத்து போதும் கமெண்ட் போடுங்க !!!!!

Thursday, September 2, 2010

என்னயா கல்வி ?

 அனைவருக்கும் என் வணக்கம் !
 இன்னக்கி  நான் கல்லூரி முடிஞ்சு வருகிறபோது   என்னை  மிகவும் பாதித்த ஒரு நிகழ்ச்சி   அதன் மூலமே இந்த பதிவு !

என்னவோ குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம்ன்னு அறிக்கைலாம் விடுறாங்க tollfree  நம்பர்லாம் குடுக்குறாங்க
எந்த அளவுக்கு அதுல வேல நடக்குதுன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னக்கி பாத்த அந்த சம்பவத்த பொருக்க முடியல !!!

என்னடா இவன் சம்பவம் சம்பவம்ன்னு சொல்றானே என்ன சம்பவம்ன்னு ரொம்ப யோசிக்காதீங்க இதுதான் ........
கல்லூரி முடிஞ்சு வீடு திரும்போது பேருந்தை விட்டு இறங்கி பத்தடி வைத்திருப்பேன் ஒரு 13 இல்ல 14 வயசு இருக்கும் ஒரு சிறுவன் "அண்ணா ஆப்பிள் வேணுமான்னா ?"

ஒரு சிறிய சாலையோர பழக்கடை வழக்கம்போல் நானும் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்தேன் !
ஒரு நொடி திரும்பிய நான் கடையருகில் சென்று பார்த்தேன் அவனை பார்த்தால் தெளிவான சென்னை சிறுவன்
"காதில் கடுக்கனும் , முக்கால் டௌசரும் ,டி.ஷர்ட்டும் " அணிந்து ஏனென்று தெரியவில்லை அவனை கண்டதும் எதாவது வாங்க தோன்றியது அவனிடம் வாழைபழம் கேட்டுவிட்டு "என்ன படிக்கிறாய் என்று கேட்டேன் "
 அதற்கு  அவன் "இல்லன்னா நான் நிறுத்திட்டேன் !" என்றான் . ஏன் என்றேன் ? "இல்ல படிக்கல !" என்றான் .
எதனாலன்னு கேட்டேன் ? "நான் பள்ளிகூடதிர்க்கே போனதில்ல !" என்றான் ஒரு நொடி அதிர்ந்தேன் !

எனக்கு வார்த்தை வரவில்லை ! அங்கிருந்து என் உடல் மட்டும் நகன்றது .... மனதை விட்டு !
 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாம் ?!
 எத்தனையோ பேர் கல்வி அமைப்பு ஆரம்பிக்கிறாங்க ஆனாலும் இந்த அவல நிலை ஏன் ?
எனக்கு யோசிக்க பொறுமையில்லை திட்டிதீர்த்துவிட்டேன் !

இலவச ஆரம்ப கல்வின்னு சொல்றாங்க ....
இலவச சாப்பாடுன்னு  சொல்றாங்க.....
இலவச சீருடை , நோட்டு புத்தகம்,செருப்பு ,முட்டை ,.
இவ்ளோ இருந்தும் இன்னும் இப்டி நிறைய பேர் இருக்காங்க !

இதுல்லாம் கொடுத்தா இன்னும் நிறைய பேர் படிக்க வருவாங்கன்னு நினைச்சேன் ...
ஆனா நம்ம ஆளுங்க என்னக்கி  சாப்பாடு போடுறாங்களோ அன்னகி மட்டும் போய் சாப்டு வராங்க ?!
சரி கொடுக்குறது தான் ஒழுங்கா கெடைக்குத இல்ல!
எங்க ஊர்ல முட்டைலாம் பக்கத்துக்கு கடைல விதுடுறாங்க !
எல்லா துறையும் இப்டிதானா ?
(எப்டி பாத்தாலும் அவுங்க குடும்பம் மட்டும் கோடிகள்ள வளருதே  ?)

இன்று உலகில் எல்லா மூலையிலும் கல்வி மட்டும் தான் நட்டமில்லா தொழில் !
சேவையை தொழிலாக்கி சிறுவனை கல்விக்குரடனாக்கியது யார் ?
எதாவது செய்யணும்ன்னு தோணுது என்ன செய்யறதுன்னு தெரியல !
எனக்கு அதெல்லாம் பத்தி ஆழமா ஒன்னும் தெரியாது ஆனா ஆதங்கத்த காட்ட முடியும் !
காட்டிட்டேன் !





இதுக்கு என்ன செய்யலாம்ன்னு ஒரு யோசனை சொல்லுங்க ?

Sunday, August 29, 2010

ட்விட்டலாம் வாங்க.. #குத்தாலத்தான்

இங்க முதல் முதலா நானும் பதிவெழுத போறேன்னு இருந்த சந்தோசம் இன்னும் எனக்கு குறையாம  இருக்க காரணமே நீங்க போடுற பின்னூட்டம்தான்  ...

அந்த பின்னூட்டம் எனக்குள்ள ரத்தஓட்டமா இருக்கு...
(ரொம்ப ஐஸ் வைக்கிற மாதிரி இருக்கா யோசிக்காதீங்க ஐஸ்தான் இதுக்காகவே நீங்க பின்னூட்டம் போடணும் பின்னாடி பக்கமா ஓடிராதீங்க !)
பின்னூட்டம் போடுற அனைவரும் இல்லனாலும் ஒரு இருபது பேர் பின்தொடரவும் செய்கிறார்கள் அது இரட்டிப்பு மகிழ்ச்சி எப்டி சொல்றது நம்ம சச்சின் சமீபத்துல போட்டாரே ரெட்டை சதம் ஒரே நல்ல இந்தியாவே சந்தோசபட்டுச்சே   அது மாதிரி !!!
(இதுக்கு ஜன்னியே வந்துருக்கணுமே !:))


என்ன தலைப்புல ட்விட்லாம்னு போட்டுட்டு இங்க மொக்க போடுறானேன்னு நினைகிறீங்க புரியுது !!
நான் ட்விட்டுனது மட்டும் போடுலாம்னு நினெச்சேன் இப்போ திட்டம் ஆ) செயல்படுத்தபடுகிறது .....

ஏன் ப்ளாக்ல ட்விட்ட கூடாது ?
அப்டின்னு தோனுச்சு அதான் ...

காலைல எந்துருச்சு பல்லு கூட வெளக்கமா இந்த டப்பா முன்னாடி உக்கார்றதுதான் இப்ப ட்ரெண்டு !
(பல்லு வெளக்காம இருக்குறத எப்டிலாம் சமாளிக்க வேண்டிருக்கு  )

உண்மைதான் நம்ம ஆளுங்க பாதிபேர் இப்டித்தான் இருக்காங்க ..
பேஸ்புக்கில் மொக்கை !
ட்விட்டரில் கொடூர மொக்கை !
அடுத்த லெவல் என்னன்னா
ஜி சாட்டில் பெர்சநெல் மொக்கை !
(ஏன்டா இப்டின்னு கேட்டா "இது கம்பிட்டர் டிசென் எச்போர்ட் குவாலிட்டி ன்னு " செந்தில் டோன் போடுறானுங்க )

ரெண்டு நாள் முன்னாடி   ட்வீட் மீட்ன்னு  அண்ணன் @ksawme ஒரு update போட்டார்  என்னன்னு தெளிவா புரியாட்டியும் ஒரு அளவுக்கு அவர் சொன்னது புரிஞ்சுது!! சரி போலாம்னு முடிவெடுத்துருக்கேன் !

அங்க என்ன நடந்துதுன்னு நாளக்கி  எழுதுறேன் இப்ப கொஞ்சம் மொக்க போடா போறேன் தயாரா இருங்க !~!

நேத்துதான் பாஸ் என்கிற பாஸ்கரன் ட்ரைலர் பாத்தேன் செம்ம சிரிப்பு டைரக்டர் நம்ம "சிவா மனுசுல சக்தி" படம் பன்னவர்தான் அது மாதிரியே சந்தானம் தாறு மாருப்பா ! அவர் ட்ரைலர்ல  சொல்லுவர் "நன்பேண்டா" ன்னு ஒரு டயலாக் .. செம செம ....
தரவிரக்கலாம்னு கூகுள்ல டைப் பண்ணா பாட்டு வந்துருச்சு !!
சரி ஒடனே அதையும் எறக்கி கேட்டேன்
யுவன் திரும்பவும் நம்மள திரும்ப வச்சிருக்கார் ..
அ) அட பாஸ்சு  பாஸ்சு .. பாட்டுதான் intro ன்னு நெனைக்கிறேன் ஹீரோவ பத்தி சொல்றாங்க
அதுவும் எங்க கும்பகோணத்துல எடுத்து இருக்காங்க படத்த !

ஆ) ஐலே ஐலே ... ன்னு அடுத்த பாட்டு
ஹீரோயின பாத்த ஹீரோ பாடுற பாட்டுன்னு தெளிவா தெரிது ... 

இ)மாமா  மாமா ... ன்னு ஒரு பாட்டு செம குத்து !
தாளம் போடா வைக்குது ..... இந்த பாட்டுல கும்பகோணம் அப்புறம் பக்கத்துக்கு ஊற பத்தியெல்லாம் வருது எப்டினா
கும்பகோணத்து வெத்தல, பட்டுகோட்டையில் பாக்கு ,தஞ்சாஊர் தவில்ன்னு ஆரம்பிச்சு கிளிச்சுருகாங்க ....

ஈ)தத்தி தாவும் பேப்பர் நான் .. ன்னு ஒரு பாட்டு வழக்கம் போல யுவன் பாடுற பாட்டு காதல் ஏக்கத்துல பாடுற மாதிரி இருக்கு  ...யுவன் பாடுனாலே எப்டி இருக்கும்ன்னு தெரியும் நல்லாத்தான் இருக்கு .....

கடைசியா ஒரு பீலிங் பாட்டு பாஸ் !!
உ) யாரிந்த பெண்தான் என்று கேட்டேன் .. ன்னு தொடங்குது காதல்ல உருகி பாடுறாங்க !!

மொத்தத்துல பாஸ் pass !!

அடுத்து ஒரு மேட்டர் ....
நேத்துதான் நான் மகான் அல்ல படம் பாத்தேன்
படம் சூப்பர்ன்னு சொல்ல முடியாது !!
பரவால்லன்னு  சொல்லலாம்  ...
முதல் பாதில கொஞ்சம் ஜாலியா இருக்கு அதுலயும் நான் தூங்கிட்டேன் கொஞ்சம் பாத்ததுல வழக்கமா கார்த்தி செய்யுற நக்கல்தான்ன்னு தெரிஞ்சுது !!
இதுல ஹீரோ குடும்பத்த நல்லா காட்டிருக்காங்க அதுக்கு ஒரு செம ...
ஹீரோ தங்கச்சி தாறு மாருப்பா வாய்ப்பே  இல்ல அடுத்த ஹீரோயின் ரெடின்னு கூட சொல்லலாம் ..
அப்பாவா நடிச்சவர் நல்லா பன்னிருகார் ...
அப்புறம் ரெண்டாம் பாதில விருவிருப்பா இருக்கு கடைசியா  சண்டை காட்சிகள் செம ...
ஆனா ஒரு மனநிறைவு வரல திடீர்ன்னு முடிஞ்சமாதிரி இருக்கு பாதிக்கு மேல ஹீரோயின் காண போய்டுறாங்க ...
அவ்ளோதான் சொல்லலாம் ம்ம் நம்ம யுவன் இசை செம ......
மாயாஜால்ல பாத்தேன் தியேட்டர் மொக்கதான் என்ன ஒரு பிளஸ்ன்னா எப்ப போனாலும் டிக்கெட் கிடைக்கும் ... 
(காதலியோட போறதுக்கு சரியான இடம்... )


நான் ட்விட்டுறது எல்லாம் பேஸ்புக்குளையும் போடுவேன் அதுக்கு என் நண்பர்கள் கொஞ்சம் நல்ல கமெண்ட்ஸ் குடுத்தாங்க
நீங்களும் சொல்லுங்க எப்டி இருக்குன்னு .......



அ)  
வாழ்கை முழுக்க வாழும் என்று நீ சொன்ன நம் காதல்
வார இறுதியில் முடியும் என எதிர்பாக்கவில்லை !

#ஒரு வார காதல்

ஆ) 
வார இறுதி நாட்களில் பூக்கும் பூக்கள் மட்டும் நரகத்திற்கு செல்கின்றன என் வீட்டில்
#அவளின் பள்ளி விடுமுறை

இ) 
பேருந்தில் பயணித்த உன்னை பின்தொடர்ந்த நான் ! 
அவனுடன் வாழ்கையில் பயணிக்கும்போது என் செய்வேன் ?
#வழியில் வலியுடன் பயணித்தேன்

ஈ) 
கவிதையின் முகவரி தொலைந்தால் 
    வாக்கியமெல்லாம் கவிதையாகும் !

உ ) 
 சிறுவயதில் வைத்ததாலோ என்னவோ தெரியவில்லை இன்னும் பூக்கவே இல்லை
#என் காதல்

ஊ) 
என் நட்பில் 
பாரம் இல்லை தூரம் இருந்தது !
பார்த்தாலும்... 
அரட்டை இல்லை அமைதி இருந்தது !
பேசினாலும் 
வெறுப்பு இல்லை மௌனம் இருந்தது !
என் காதலை கூறியபோதும்  
கடுப்பு இல்லை கையில் செருப்பு இருந்தது ! :)
(இது நம்ம ஜில்லு கேடான்னு எழுதுனது கடைசியா வேணாம்னு சொல்லிட்டான் ஆனா பேஸ்புக்கில் நல்ல கமெண்ட்ஸ் கிடைச்சுது )

எ) இரவில் எழுதுவதெல்லாம் கவிதை என்றால்
இன்று நான் எழுதிய கவிதை "நட்பு" 
#ஏக்கத்தில்
  

இதுக்கெல்லாம்  மட்டும் தான் கொஞ்சம் கமெண்ட்ஸ் கிடைச்சுது ......
அவ்ளோதான் ரொம்ப மொக்கயா இருந்தா விட்ருங்க உங்களுக்கு புடிச்சி இருந்தா பின்னூட்டம் இடுங்க ....
பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்படும் 
(பின்னூட்டமே வராதோ!!!!)     
இதுவரை இல்லைனாலும் பரவால்ல இப்போ கூட நீங்க பின்தொடரலாம் 
ஏன்னா எனக்கு ரொம்ப பெரிய  மனசு எல்லாரும் வாங்க !!!!

Wednesday, August 25, 2010

க்ளிக்கியது - 26/08/2010

எங்க ஊர் பெரிய கோவில் - மாலை நேரத்தில் செம செம !


ஆற்றங்கரை சூரியன்....


எங்க வீட்டு மகாலட்சுமி !

பச்சை பசேலென்ற வயல்கள் !!
 

என்ன அழகான படைப்பூ !!!



 
ம்ம்ம்ம் இன்னும் நிறைய இருக்கு...அதெல்லாம் அப்பரம் :)

Wednesday, August 18, 2010

எனக்கு உங்க complan வேணும் !!!

அட ஒன்னும் இல்ல பாஸ் !
நான் இந்த தமிழ் பதிவுக்கு வந்ததுக்கு காரணமே தமிழ் மேல ஒரு சின்ன ஈர்ப்புதான்...
ஆனா இதுல இதுவரைக்கும் எழுதுனதுல எவ்ளோ பிழைன்னு பாத்தா நான் போட்டா பதிவோட பத்து மடங்கு அதிகமா இருக்கு !
அதனால எழுத ஆரம்பிச்சா  நிறைய யோசிச்சி பாதில மூடிட்டு போய்டுறேன் !!
நான் போடுற பதிவு எப்படியோ ஆனா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க மிக்க மகிழ்ச்சி !!
அவுங்க பதிவெல்லாம் படிக்கிறப்போ எப்டி எழுதுறாங்கன்னு யோசிப்பேன் !
அதுக்குத்தான் இந்த பதிவு
உங்க complan  எனக்கு கொஞ்சம் கொடுங்க !!!
ஒண்ணுமில்ல கொஞ்சம் "ஊக்கம்+ஆதரவு+அன்பு+அப்புறம் பின்னூட்டம்" அவ்ளோதான்
கூடவே தப்பு இருந்தா சொல்லுங்க !(அதான்பா feedback :) )


எதுக்கு complan ன்னு  கேக்குறீங்களா  வளரனும்ல அதுக்குத்தான் !!
(நண்பர்கள் complan  கொடுத்தாதான் இங்க வளர முடியும்னு கேள்விபட்டேன் )



உங்களை எல்லாம் நான் ஒரு hamam சோப்பாதான் பாக்குறேன் ஏன்னா "நீங்க இருக்க பயம் ஏன் ?"
colgate ஆ கூட இருங்க "annonymous கமெண்ட்ஸ் எதிர்த்து போராட"
எனக்கு maggie செய்ய கத்து கொடுங்க "ரெண்டு நிமிஷத்துல new post "
நீங்க என் ப்ளாக்ல ஒரு airtel லா  இருங்க "express yourself "
நா கண்டிப்பா vodafone ஆ இருப்பேன் "wherever  you  go i will follow you "(அதன்பா twitter ,facebook ,gmail : )
எப்படியாவது என்ன horlicks ஆ மாத்திடுங்க "sharper , stronger , taller "
நமக்கு இந்த ப்ளாக் ஒரு nokia வா இருக்கும்ன்னு நம்புறேன் "connecting people "
என் மேல sony ericsson ஆ இருங்க "make believe "
நான் கண்டிப்பா aquafina வா இருப்பேன் "purity guaranteed "
கடைசியா நான் 3 idiots ன்னு சொல்லி கெளம்புறேன் "all is  well "
எண்ட ஒருத்தர் apple  ன்னு சொன்னார் அதான் இப்டி யோசிச்சேன் "think different "
அப்துல் கலாமே addidas ன்னு சொல்றார் தெரியுமா "immpossible is nothing " நம்ம அத பின்தொடர்வோம்ன்னு
முடிவெடுத்து nike ஆ செஞ்சுட்டேன் "just do it "
சரி உங்க கிட்ட kodak  ஆ இருக்கனும்ன்னு நெனச்சேன் அதான் "share moments share life "


"paper ல தப்பு பண்ணாலும் lifeல தப்பு பண்ணாலும் "rubber " பயன்படுத்துங்க"--(ads for kohinoor condoms)

உங்க விளம்பரம் இங்கே இடம் பெற அணுக வேண்டிய முகவரி "Post a Comment"

 
இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு .....

எப்டி இருந்தாலும் என் கூட இருங்க உறுதுணையா !!
சரி சீக்கிரமா ஒரு நல்ல பதிவோட வரேன் !!!

இப்ப dell மறந்துடாதீங்க "yours is here  " (அதான்பா கமெண்ட்ஸ் !!)

Monday, August 9, 2010

ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள் !!!

என்ன கொடும இது !
நம்ம  ஜில்லு என்ன விட்டுட்டு டூர் போய்ட்டான் பாஸ் !!
அப்படா
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
 சந்தோசமா இருக்கலாம்ன்னு பாத்தா செம்ம காண்டுப்பா !



அதான் ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள்ன்னு இந்த சோகமான நேரத்த உங்க கூட பகிர்ந்துகிறேன் !
  
நீ இல்ல !
நிஜம் இல்ல ! 
நிழல் கூட துணை இல்ல !
ஜில்தண்ணி ஊர்ல இல்ல !
மொக்க போடா கம்பெனி இல்ல !
ப்ளாக் பாக்கவே  பிடிக்கல !
ட்விட்டர்ல   ட்விட்டவும் தோனல !
வெட்டியா மெயில் செக் பண்ணல !
அட இன்னக்கி கலூரிக்கே  போகல !
உன் புது பதிவு பாக்காம என் கண்ணு ரெண்டும் தூங்கல !
 உன் மொக்கைய படிக்காம நான் இன்னக்கி பல்லே விலக்கல !
 நீ அங்க குளிக்க  மட்டும் தான் போயிருக்க (குற்றாலம்)
நான் இங்கு குளிக்கவே இல்ல !
நீ அங்க எப்பவும் தண்ணில ஜில்தண்ணியா இருப்ப
நான் தனியா "ஒரு குவாட்டர் தண்ணில இருக்கேன் "! 
 நீ ஒரு கூட்டமா அங்கயும் மொக்க போட்டுக்கிட்டு இருப்ப
 நான் இங்க தனியா குப்ப கொட்டிகிட்டு இருக்கேன் !

நீ இல்லாமல் என் உடல் .....

உன் கூட மொக்க போடாத என் விரல்கள் கூட  சோர்ந்து விட்டது !
கண்கள் காய்ந்துவிட்டது !
காது கத்துது !
மூக்கு அடைக்குது !
மூளை முக்குது !
இப்படி என்ன என்னவோ ஆகுது ................


இதனால நான் என்ன சொல்ல வரேன்னா 
 நீ அங்கயும் ஜில்தண்ணியாவே இரு
நீ சீக்கிரம் வரலன்னா நா இங்க பயங்கர சூடா சுடுதண்ணியா மாறிடுவேன் !














தம்பி ஜில்தன்னியை சீக்கிரம் வரும்படி கேட்டுகொள்கிறேன் !
(பின்குறிப்பு வந்ததும் ட்ரீட்டு !)
  நாள் தாமதம் ஆனா அடி உதை ஆகிய அனைத்தும் இலவசமகா ஜில்லுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்  !!!

இந்த பதிவு புடிச்சா கீழ ஒரு குத்து குத்துங்க (நம்ம ஜில்ல குத்துறதா நெனசுகிட்டு )
இது என் லேப்டாப் ல எழுதுற முதல் பதிவு !:)

Thursday, August 5, 2010

கடவுள் என்னதான் பண்ணுறார் ???

இங்க நான் சொல்ல போறது எல்லாமே என்னோட கருத்து !!
காலை ஐந்து முப்பது மணிக்கு எழுந்து குளித்து புத்தகத்தை எடுத்து இரவு படித்ததெல்லாம் ஒரு முறை பார்த்து
பள்ளிக்கு போகும் வழியில் கோவிலுக்கு போய் கடவுளிடம் மனமுருகி வேண்டி வெளியில் வந்து செருப்பு போடும் போது வந்தான் எமன் அதிவேகமாய் வந்த அந்த லாரி மரத்தில் மோதியது முன்னால் அந்த சிறுவனையும் சேர்த்து .......
 அந்த இறுதி நொடி வரை கடவுள் மேல் நம்பிக்கை வைத்த அவனுக்கு என்ன பலன் ...
அவன் கோவிலுக்கு போகாமல் பரிச்சைக்கு போனால் தேர்வில் தோற்று போவான என்ன ? இல்லை கண்டிப்பாக இல்லை
கொஞ்சம் அதிகமாக அவன் மேல் நம்மிக்கை வைத்து இருந்தால் இந்த  நொடி அவன் உயிர் போய் இருக்காது  !
(கடவுள் மேல வைக்கிற நம்பிகைய நம்ம மேல வைக்கலாம் எல்லம் சரியா நடக்கும் )

கடவுள் யாருக்குத்தான் நல்லது செய்வார் ? அவர் செய்யும் நல்லது எல்லாம் "போட்டிக்கு ஆளே இல்லாத வேட்பாலனை ஜெய்க்க வைப்பது போல் "  (இந்த இடத்தில கடவுள் இல்லனாலும் ஜெய்கலாம்)

மனிதன் அவன் மேல் நம்பிக்கை வைக்க முடியாமல் உருவாக்கிய  உயிரில்லாத  உருவமே க(டவு)ள்  !
கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் அது நம்பிக்கை அதுவே அதிகமானால் அது மூடநம்பிக்கை !

போன வாரம் கடவுளுக்காக நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை (வெறும் செய்தியாக ) என்ன செஞ்சாங்க கொன்னவங்கள புடிச்சி உள்ள போட்டா போன உயிர் திரும்பி  வருமா இல்ல கடவுள்தான் கொடுப்பாரா
எதுமே நடக்காது அவுனுங்க இன்னும் பாதுகாப்பா அடுத்த பலி கொடுப்பாங்க ...

கடவுள் நல்லது மட்டும்தான் செயவார்ணா எதுக்கு மதம் மன்காநின்னு பிரிச்சாறு ?
அதுலயே ஆக்குறது ,அழிக்கிறது, காக்குரதுன்னு இலாக்கா வெங்காயம்லாம் ஏன்  பிரிக்கணும்
ஒரே குளம் ஒன்றே தேவைன்னு வைக்கலாம்ல !

மனிதனுக்கு மட்டும் சூப்பர் பவர்ஸ்லாம்  வந்துச்சுன்னா (கடவுள் தர தேவை இல்லை அறிவியல் இல்ல பரிநாமதுனாலையோ வரட்டும் ) கோயிலுக்கு யாரும் போக மாட்டாங்க கண்டிப்பா சொல்றேன் !

இப்போ மட்டும் யார் சந்தோசத்துக்கு கோயிலுக்கு போறாங்க சரக்கு அடிக்கத்தான் போறாங்க !
சோகம்ன்னு வந்தா மட்டும் கடவுள் நெனப்பு வந்துடும் !
 நூத்திஎட்டு தேங்கா உடைகிறேன் முடி எடுக்குறேன்னு வேண்டிகிட்டு
(ஏன் கை எடுக்குறேன் காத எடுக்குறேன்னு வேண்டிக்க கூடாதா ? )அந்த கஷ்டம் போக அவுங்களே போராடி அந்த துன்பம் போச்சுன்னா கடவுள் பேர பினாமியா பயன்படுத்துறாங்க !

ஒ ! ஒரு வேல நல்ல வசூல் பாக்கதான் கஷ்டம் குடுக்குராரோ கடவுள் ? காணிக்கை வந்த உடனே
ctrl +z   குடுத்துடுவாரோ ?
சரி அப்டி இல்லனா அநியாயமா கஷ்டத்துக்கு ஆளாகுற மக்களை காப்பதலாம்ல ?
என்னதான் பண்றார் கடவுள் ?(இருந்தாத்தான  எதாவது பண்றதுக்கு )

"அவர் என்ன வேனா பண்ணட்டும் நாம என்ன செய்ய போறோம்ன்னு யோசிங்க  நம்பிக்கை தன்னம்பிக்கையா மாறிடும் "
(there is no god so belive in yourself !! )

கடவுள் காப்பாத்துவார் !
கடவுள் காப்பாத்துவார்னு சொல்லாம
நான் சமாளிச்சுடுவேன் !
நான் சமாளிச்சுடுவேன்னு சொல்லி பழகுங்க எவ்ளோ பெரிய கஷ்டத்தையும் உடைக்கலாம் !!


சரியான விடையை தேந்தெடுக்க
என்னதான் பண்றார் கடவுள் ?
அ.சன் டீவீல சீரியல் பாக்குறார்
ஆ.ஸ்டார் மூவீஸ்ல இங்கிலீஷ் படம் பாக்குறார்
இ.விஜய் டீவீ ல ரியாலிட்டி ஷோ பாக்குறார்

 சரியான விடை தெரிந்தால் கோயிலுக்கு போகாதீங்க
உங்க மேல இன்னும் அதிகமா நம்பிக்கை வைங்க !!!! 
புடிச்சா வோட்டு போடுங்க
புடிச்சாலும் புடிகலனாலும் கமெண்ட் போடுங்க !
(அதுல என்னோட தப்ப தெரிஞ்சுப்பேன்)

Saturday, July 31, 2010

மச்சி ட்ரீட்...(இன்பத்திலும்! துன்பத்திலும்! )

என்னங்க நமீதா எப்டி இருந்தாங்க (முந்தய பதிவு )?
இப்ப வரைக்கும் என்ன எழுதபோறேன்னு தெரியல கடந்த ஒரு மாசமா என்னோட எல்லா வேலையும் இப்படிதாங்க போகுது முன்னாடியே முடிவு பண்ணினா நாசமா போய்டுது அதான் எதுமே முடிவு பண்ணாம எரங்குறதா  முடிவு பண்ணிட்டேன் !!

இந்த ட்ரீட் மேட்டர் கூட நம்ம சில்லோட பதிவ படிச்சப டொய்ங் நு மண்டகுள்ள ஒரு புலப் எரிஞ்சது வேற என்ன எல்லாம் ஒரு பிளாஷ்பாக்தான்
(தலைவரோட பாடு கூட இருக்கே "நினைவோ ஒரு பறவை அது டொய்ங் நு  அடிக்கும் சிறகை !!")


கல்லூரி  சேந்த பிறகு மூனாமாண்டு நிறைவுலத்தான் நிறைய லீவே விட்டாங்க ஒரு மாசம் வீட்டுக்கு போய் உட்கார்ரதுகுள்ள மச்சி ட்ரீட்னு வந்துட்டானுங்க வேற யாரு உயரிலும் மேலான நண்பர்கள் !!

வீட்டுக்கு தெரியாம சுட்டு வச்ச துட்டுலாம் "தண்ணியா" போகுது பாஸ் என்ன செய்ய !!
சரி விடுன்னு வச்சா தினம் தினம் தீபாவளியா இருக்கு நல்ல வேல தினமும் நான் இல்ல சங்கத்துல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் டௌசெர் அவுக்குரானுங்க !!!

இதுல என்ன ஒரு கொடுமைனா இதுக்கு இவங்க சொல்ற காரணம்தான் பாஸ் !
(கான்செப்ட் கிடைச்சுடுச்சு  யே.......)


இதுக்காக ரூம் இல்லங்க வீடு புடிச்சி யோசிக்கிறாங்க !!

நண்பன் : மச்சி இன்னக்கி உன்  ட்ரீட்டு டா லைசென்ஸ் எடுத்ததுக்கு !
நான்: சரி மச்சி !
நண்பன்:அப்ப நாளைக்கும் நீதான் மச்சி ட்ரீட்டு !
நான் :எதுக்கு டா ?
நண்பன் :இன்னக்கி ட்ரீட் வைக்கபோறல்ல அதுக்கு டா !
நான் : ?! :(\

அட அத விடுங்க சந்தோசமான விஷயம் அட சோகத்துக்கும் கேக்குறாங்க பாஸ்! 

வண்டில இருந்து கீழ விழுந்தா ட்ரீட்டு  !
நான் :மச்சி இன்னக்கி வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன்டா :(

நண்பன்:சரி கவலை படாத டா சாங்காலம் ட்ரீட் வச்சிபோம் எல்லாம் சரியா போய்டும் !
நான் : என்ன கொடும சார் இது ?!
நண்பன்:சரி கோச்சுக்காத டா நாளைக்கி வச்சா கூட  பரவாஇல்ல !