Pages

Wednesday, August 18, 2010

எனக்கு உங்க complan வேணும் !!!

அட ஒன்னும் இல்ல பாஸ் !
நான் இந்த தமிழ் பதிவுக்கு வந்ததுக்கு காரணமே தமிழ் மேல ஒரு சின்ன ஈர்ப்புதான்...
ஆனா இதுல இதுவரைக்கும் எழுதுனதுல எவ்ளோ பிழைன்னு பாத்தா நான் போட்டா பதிவோட பத்து மடங்கு அதிகமா இருக்கு !
அதனால எழுத ஆரம்பிச்சா  நிறைய யோசிச்சி பாதில மூடிட்டு போய்டுறேன் !!
நான் போடுற பதிவு எப்படியோ ஆனா எனக்கு நல்ல நண்பர்கள் கிடைச்சாங்க மிக்க மகிழ்ச்சி !!
அவுங்க பதிவெல்லாம் படிக்கிறப்போ எப்டி எழுதுறாங்கன்னு யோசிப்பேன் !
அதுக்குத்தான் இந்த பதிவு
உங்க complan  எனக்கு கொஞ்சம் கொடுங்க !!!
ஒண்ணுமில்ல கொஞ்சம் "ஊக்கம்+ஆதரவு+அன்பு+அப்புறம் பின்னூட்டம்" அவ்ளோதான்
கூடவே தப்பு இருந்தா சொல்லுங்க !(அதான்பா feedback :) )


எதுக்கு complan ன்னு  கேக்குறீங்களா  வளரனும்ல அதுக்குத்தான் !!
(நண்பர்கள் complan  கொடுத்தாதான் இங்க வளர முடியும்னு கேள்விபட்டேன் )



உங்களை எல்லாம் நான் ஒரு hamam சோப்பாதான் பாக்குறேன் ஏன்னா "நீங்க இருக்க பயம் ஏன் ?"
colgate ஆ கூட இருங்க "annonymous கமெண்ட்ஸ் எதிர்த்து போராட"
எனக்கு maggie செய்ய கத்து கொடுங்க "ரெண்டு நிமிஷத்துல new post "
நீங்க என் ப்ளாக்ல ஒரு airtel லா  இருங்க "express yourself "
நா கண்டிப்பா vodafone ஆ இருப்பேன் "wherever  you  go i will follow you "(அதன்பா twitter ,facebook ,gmail : )
எப்படியாவது என்ன horlicks ஆ மாத்திடுங்க "sharper , stronger , taller "
நமக்கு இந்த ப்ளாக் ஒரு nokia வா இருக்கும்ன்னு நம்புறேன் "connecting people "
என் மேல sony ericsson ஆ இருங்க "make believe "
நான் கண்டிப்பா aquafina வா இருப்பேன் "purity guaranteed "
கடைசியா நான் 3 idiots ன்னு சொல்லி கெளம்புறேன் "all is  well "
எண்ட ஒருத்தர் apple  ன்னு சொன்னார் அதான் இப்டி யோசிச்சேன் "think different "
அப்துல் கலாமே addidas ன்னு சொல்றார் தெரியுமா "immpossible is nothing " நம்ம அத பின்தொடர்வோம்ன்னு
முடிவெடுத்து nike ஆ செஞ்சுட்டேன் "just do it "
சரி உங்க கிட்ட kodak  ஆ இருக்கனும்ன்னு நெனச்சேன் அதான் "share moments share life "


"paper ல தப்பு பண்ணாலும் lifeல தப்பு பண்ணாலும் "rubber " பயன்படுத்துங்க"--(ads for kohinoor condoms)

உங்க விளம்பரம் இங்கே இடம் பெற அணுக வேண்டிய முகவரி "Post a Comment"

 
இவ்ளோ நேரம் பொறுமையா படிச்சதுக்கு .....

எப்டி இருந்தாலும் என் கூட இருங்க உறுதுணையா !!
சரி சீக்கிரமா ஒரு நல்ல பதிவோட வரேன் !!!

இப்ப dell மறந்துடாதீங்க "yours is here  " (அதான்பா கமெண்ட்ஸ் !!)

Monday, August 9, 2010

ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள் !!!

என்ன கொடும இது !
நம்ம  ஜில்லு என்ன விட்டுட்டு டூர் போய்ட்டான் பாஸ் !!
அப்படா
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
 சந்தோசமா இருக்கலாம்ன்னு பாத்தா செம்ம காண்டுப்பா !



அதான் ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள்ன்னு இந்த சோகமான நேரத்த உங்க கூட பகிர்ந்துகிறேன் !
  
நீ இல்ல !
நிஜம் இல்ல ! 
நிழல் கூட துணை இல்ல !
ஜில்தண்ணி ஊர்ல இல்ல !
மொக்க போடா கம்பெனி இல்ல !
ப்ளாக் பாக்கவே  பிடிக்கல !
ட்விட்டர்ல   ட்விட்டவும் தோனல !
வெட்டியா மெயில் செக் பண்ணல !
அட இன்னக்கி கலூரிக்கே  போகல !
உன் புது பதிவு பாக்காம என் கண்ணு ரெண்டும் தூங்கல !
 உன் மொக்கைய படிக்காம நான் இன்னக்கி பல்லே விலக்கல !
 நீ அங்க குளிக்க  மட்டும் தான் போயிருக்க (குற்றாலம்)
நான் இங்கு குளிக்கவே இல்ல !
நீ அங்க எப்பவும் தண்ணில ஜில்தண்ணியா இருப்ப
நான் தனியா "ஒரு குவாட்டர் தண்ணில இருக்கேன் "! 
 நீ ஒரு கூட்டமா அங்கயும் மொக்க போட்டுக்கிட்டு இருப்ப
 நான் இங்க தனியா குப்ப கொட்டிகிட்டு இருக்கேன் !

நீ இல்லாமல் என் உடல் .....

உன் கூட மொக்க போடாத என் விரல்கள் கூட  சோர்ந்து விட்டது !
கண்கள் காய்ந்துவிட்டது !
காது கத்துது !
மூக்கு அடைக்குது !
மூளை முக்குது !
இப்படி என்ன என்னவோ ஆகுது ................


இதனால நான் என்ன சொல்ல வரேன்னா 
 நீ அங்கயும் ஜில்தண்ணியாவே இரு
நீ சீக்கிரம் வரலன்னா நா இங்க பயங்கர சூடா சுடுதண்ணியா மாறிடுவேன் !














தம்பி ஜில்தன்னியை சீக்கிரம் வரும்படி கேட்டுகொள்கிறேன் !
(பின்குறிப்பு வந்ததும் ட்ரீட்டு !)
  நாள் தாமதம் ஆனா அடி உதை ஆகிய அனைத்தும் இலவசமகா ஜில்லுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்  !!!

இந்த பதிவு புடிச்சா கீழ ஒரு குத்து குத்துங்க (நம்ம ஜில்ல குத்துறதா நெனசுகிட்டு )
இது என் லேப்டாப் ல எழுதுற முதல் பதிவு !:)

Thursday, August 5, 2010

கடவுள் என்னதான் பண்ணுறார் ???

இங்க நான் சொல்ல போறது எல்லாமே என்னோட கருத்து !!
காலை ஐந்து முப்பது மணிக்கு எழுந்து குளித்து புத்தகத்தை எடுத்து இரவு படித்ததெல்லாம் ஒரு முறை பார்த்து
பள்ளிக்கு போகும் வழியில் கோவிலுக்கு போய் கடவுளிடம் மனமுருகி வேண்டி வெளியில் வந்து செருப்பு போடும் போது வந்தான் எமன் அதிவேகமாய் வந்த அந்த லாரி மரத்தில் மோதியது முன்னால் அந்த சிறுவனையும் சேர்த்து .......
 அந்த இறுதி நொடி வரை கடவுள் மேல் நம்பிக்கை வைத்த அவனுக்கு என்ன பலன் ...
அவன் கோவிலுக்கு போகாமல் பரிச்சைக்கு போனால் தேர்வில் தோற்று போவான என்ன ? இல்லை கண்டிப்பாக இல்லை
கொஞ்சம் அதிகமாக அவன் மேல் நம்மிக்கை வைத்து இருந்தால் இந்த  நொடி அவன் உயிர் போய் இருக்காது  !
(கடவுள் மேல வைக்கிற நம்பிகைய நம்ம மேல வைக்கலாம் எல்லம் சரியா நடக்கும் )

கடவுள் யாருக்குத்தான் நல்லது செய்வார் ? அவர் செய்யும் நல்லது எல்லாம் "போட்டிக்கு ஆளே இல்லாத வேட்பாலனை ஜெய்க்க வைப்பது போல் "  (இந்த இடத்தில கடவுள் இல்லனாலும் ஜெய்கலாம்)

மனிதன் அவன் மேல் நம்பிக்கை வைக்க முடியாமல் உருவாக்கிய  உயிரில்லாத  உருவமே க(டவு)ள்  !
கொஞ்சம் நம்பிக்கை இருந்தால் அது நம்பிக்கை அதுவே அதிகமானால் அது மூடநம்பிக்கை !

போன வாரம் கடவுளுக்காக நரபலி கொடுக்கப்பட்ட குழந்தை (வெறும் செய்தியாக ) என்ன செஞ்சாங்க கொன்னவங்கள புடிச்சி உள்ள போட்டா போன உயிர் திரும்பி  வருமா இல்ல கடவுள்தான் கொடுப்பாரா
எதுமே நடக்காது அவுனுங்க இன்னும் பாதுகாப்பா அடுத்த பலி கொடுப்பாங்க ...

கடவுள் நல்லது மட்டும்தான் செயவார்ணா எதுக்கு மதம் மன்காநின்னு பிரிச்சாறு ?
அதுலயே ஆக்குறது ,அழிக்கிறது, காக்குரதுன்னு இலாக்கா வெங்காயம்லாம் ஏன்  பிரிக்கணும்
ஒரே குளம் ஒன்றே தேவைன்னு வைக்கலாம்ல !

மனிதனுக்கு மட்டும் சூப்பர் பவர்ஸ்லாம்  வந்துச்சுன்னா (கடவுள் தர தேவை இல்லை அறிவியல் இல்ல பரிநாமதுனாலையோ வரட்டும் ) கோயிலுக்கு யாரும் போக மாட்டாங்க கண்டிப்பா சொல்றேன் !

இப்போ மட்டும் யார் சந்தோசத்துக்கு கோயிலுக்கு போறாங்க சரக்கு அடிக்கத்தான் போறாங்க !
சோகம்ன்னு வந்தா மட்டும் கடவுள் நெனப்பு வந்துடும் !
 நூத்திஎட்டு தேங்கா உடைகிறேன் முடி எடுக்குறேன்னு வேண்டிகிட்டு
(ஏன் கை எடுக்குறேன் காத எடுக்குறேன்னு வேண்டிக்க கூடாதா ? )அந்த கஷ்டம் போக அவுங்களே போராடி அந்த துன்பம் போச்சுன்னா கடவுள் பேர பினாமியா பயன்படுத்துறாங்க !

ஒ ! ஒரு வேல நல்ல வசூல் பாக்கதான் கஷ்டம் குடுக்குராரோ கடவுள் ? காணிக்கை வந்த உடனே
ctrl +z   குடுத்துடுவாரோ ?
சரி அப்டி இல்லனா அநியாயமா கஷ்டத்துக்கு ஆளாகுற மக்களை காப்பதலாம்ல ?
என்னதான் பண்றார் கடவுள் ?(இருந்தாத்தான  எதாவது பண்றதுக்கு )

"அவர் என்ன வேனா பண்ணட்டும் நாம என்ன செய்ய போறோம்ன்னு யோசிங்க  நம்பிக்கை தன்னம்பிக்கையா மாறிடும் "
(there is no god so belive in yourself !! )

கடவுள் காப்பாத்துவார் !
கடவுள் காப்பாத்துவார்னு சொல்லாம
நான் சமாளிச்சுடுவேன் !
நான் சமாளிச்சுடுவேன்னு சொல்லி பழகுங்க எவ்ளோ பெரிய கஷ்டத்தையும் உடைக்கலாம் !!


சரியான விடையை தேந்தெடுக்க
என்னதான் பண்றார் கடவுள் ?
அ.சன் டீவீல சீரியல் பாக்குறார்
ஆ.ஸ்டார் மூவீஸ்ல இங்கிலீஷ் படம் பாக்குறார்
இ.விஜய் டீவீ ல ரியாலிட்டி ஷோ பாக்குறார்

 சரியான விடை தெரிந்தால் கோயிலுக்கு போகாதீங்க
உங்க மேல இன்னும் அதிகமா நம்பிக்கை வைங்க !!!! 
புடிச்சா வோட்டு போடுங்க
புடிச்சாலும் புடிகலனாலும் கமெண்ட் போடுங்க !
(அதுல என்னோட தப்ப தெரிஞ்சுப்பேன்)

Saturday, July 31, 2010

மச்சி ட்ரீட்...(இன்பத்திலும்! துன்பத்திலும்! )

என்னங்க நமீதா எப்டி இருந்தாங்க (முந்தய பதிவு )?
இப்ப வரைக்கும் என்ன எழுதபோறேன்னு தெரியல கடந்த ஒரு மாசமா என்னோட எல்லா வேலையும் இப்படிதாங்க போகுது முன்னாடியே முடிவு பண்ணினா நாசமா போய்டுது அதான் எதுமே முடிவு பண்ணாம எரங்குறதா  முடிவு பண்ணிட்டேன் !!

இந்த ட்ரீட் மேட்டர் கூட நம்ம சில்லோட பதிவ படிச்சப டொய்ங் நு மண்டகுள்ள ஒரு புலப் எரிஞ்சது வேற என்ன எல்லாம் ஒரு பிளாஷ்பாக்தான்
(தலைவரோட பாடு கூட இருக்கே "நினைவோ ஒரு பறவை அது டொய்ங் நு  அடிக்கும் சிறகை !!")


கல்லூரி  சேந்த பிறகு மூனாமாண்டு நிறைவுலத்தான் நிறைய லீவே விட்டாங்க ஒரு மாசம் வீட்டுக்கு போய் உட்கார்ரதுகுள்ள மச்சி ட்ரீட்னு வந்துட்டானுங்க வேற யாரு உயரிலும் மேலான நண்பர்கள் !!

வீட்டுக்கு தெரியாம சுட்டு வச்ச துட்டுலாம் "தண்ணியா" போகுது பாஸ் என்ன செய்ய !!
சரி விடுன்னு வச்சா தினம் தினம் தீபாவளியா இருக்கு நல்ல வேல தினமும் நான் இல்ல சங்கத்துல இருக்குற எல்லாரையும் ஒரு நாள் டௌசெர் அவுக்குரானுங்க !!!

இதுல என்ன ஒரு கொடுமைனா இதுக்கு இவங்க சொல்ற காரணம்தான் பாஸ் !
(கான்செப்ட் கிடைச்சுடுச்சு  யே.......)


இதுக்காக ரூம் இல்லங்க வீடு புடிச்சி யோசிக்கிறாங்க !!

நண்பன் : மச்சி இன்னக்கி உன்  ட்ரீட்டு டா லைசென்ஸ் எடுத்ததுக்கு !
நான்: சரி மச்சி !
நண்பன்:அப்ப நாளைக்கும் நீதான் மச்சி ட்ரீட்டு !
நான் :எதுக்கு டா ?
நண்பன் :இன்னக்கி ட்ரீட் வைக்கபோறல்ல அதுக்கு டா !
நான் : ?! :(\

அட அத விடுங்க சந்தோசமான விஷயம் அட சோகத்துக்கும் கேக்குறாங்க பாஸ்! 

வண்டில இருந்து கீழ விழுந்தா ட்ரீட்டு  !
நான் :மச்சி இன்னக்கி வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன்டா :(

நண்பன்:சரி கவலை படாத டா சாங்காலம் ட்ரீட் வச்சிபோம் எல்லாம் சரியா போய்டும் !
நான் : என்ன கொடும சார் இது ?!
நண்பன்:சரி கோச்சுக்காத டா நாளைக்கி வச்சா கூட  பரவாஇல்ல !

Wednesday, July 28, 2010

நான் எடுத்த நமீதா போட்டோ !!!

இன்னக்கி ஒரு படபதிவு போடலாம்னு தோனுச்சு என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான் நம்ம நமி படம் நினைப்பு வந்துச்சு

இப்டியெல்லாம் டிரையல் ரூம்ல போட்டோவ வச்சா...நாங்க எப்டி நம்பி உள்ள போறது...


நான் ட்ரெஸ்ஸே போட்டு பாக்கல போட்டோவ மட்டும் பாத்துட்டு வந்துட்டேன் : )

நீங்க கூட நமீதான்னு டைட்டில் பாத்துட்டுதான வந்தீங்க அதுக்குதான் கம்பி விளம்பரத்தில் கூட நமிதாவ போடுறாங்க அதே ஐடியாதான்
__________________________________________________________________________

அடுத்து நம்ம "நோ பார்கிங்தான்"


இது என்னவோ தனி கலைன்னு நம்ம ஆளுங்க நினைக்கிறாங்க  போல அந்த அறிவிப்புக்கு ரெண்டு பக்கமும் இடம் இருக்கும் ஆனா பாருங்க முட்டிதான் வச்சிருக்காரு தல !!

கேட்டா "தடைகளை  தடை  செய்யும் சங்கம்னு " ஒரு பேர் வேற !
இதுகல என்ன செய்ய மாதவன் மாதிரிதான் கேக்கணும் 
இப்ப என்ன செய்ய
 
________________________________________________________________________

அட எங்க ஊர்தான்பா



 ஒரே பேர வித விதமா எழுதுற தெரம இவங்களுக்குதான் இருக்கு நெறைய ... இந்த ஊர் பக்கம் வராதவங்க வந்தா அருவி எங்க இருக்கு கொரங்கு எங்க  இருக்குனு கேக்குறாங்க பாஸ் என்ன செய்ய முடியும் அதான் என்னோட சோகத்த  இங்க சொல்றேன் ....நீங்களாச்சும் எங்க ஊருக்கு வந்தா தெளிவா இருங்க !
_____________________________________________________________________

போன வாரம் பக்கத்துல தெரிஞ்சவங்க வீட்டுக்கு போனேன்
அங்கதான்  இந்த கொடுமைய பாத்தேன் என்னதான் சின்ன கொழந்த அடம் புடிச்சாலும் பார்சல் பண்றதெல்லாம் ஓவர்
புரியலையா பாருங்க


திடீர்னு பாத்துட்டு ஷாக் ஆய்ட்டேன் கார்கோ போட்டி குள்ள போட்டு விளையாடுறாங்களாம் கொய்யால

இப்டியடா விளையாடுவீங்க உட்டா பார்சல் பண்ணி வேய்ட் போட்டு அனுபிருவாங்க  போல ...

_____________________________________________________________________

த்ரீ இடியட்ஸ்  படம் பாத்துட்டு ரொம்ப பீல் பண்ணிட்டு இருந்த நேரத்துல எங்க வகுப்பு ஒரு மூணு பேர் பேசிட்டு இருந்தாங்க நான் எப்போதுமே கடைசி பெஞ்ச்தான் அவுங்கல பாத்தா நம்ம  த்ரீ இடியட்ஸ் மாதிரியே இருக்கு அங்கயே புடிச்சிடேன்ல படத்த(எங்களுக்கு கிட்னி அதிகம்)

படத்தோட ஸ்டில் பாத்தீங்கன்னா தெரியும் !!!
அப்டி இல்லனா என்ன கேக்காதீங்க !

சரி கடைசியா ஒரு தகவல்
உங்களுக்கு தெரிஞ்ச நம்ம ஜில்தண்ணி யோட போட்டோ ஒன்னு மாட்டிருக்கு
பாத்து பயந்துடாதீங்க அப்புறம் ரகசியமா வச்சிகோங்க !!!



அட தத்ரூபமா இருக்குல்ல என்ன போஸ் என்ன போஸ் ஆஸ்கார் அவார்டே கொடுக்கலாம்  !!!!

Tuesday, July 27, 2010

எனக்கு பிடித்த பதிவர்கள் 0.1

நம்ம தமிழ் பதிவுலகம் மிகப் பெரியதுங்க,தினம் தினம் பல புதியவர்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.நிறைய திறமைசாளிகள் இருக்கின்றனர்,வல்லுனர்கள் இருக்கின்றனர் நமக்கு வழிகாட்ட,பிரபலங்கள் இருக்கிறார்கள்.

இந்த
பதிவுலகில் எனக்கு பிடித்த பதிவர்கள் ஏகப்பட்ட பேர் இருக்காங்க,அதனால் கொஞ்சம் புதியவர்களில் இருந்து தொடங்குகிறேன்

தங்களுக்கு
நேரம் கிடைத்தால் இவர்களை படியுங்கள்,பின்னூட்டமிடுங்கள்,அவர்களுக்கு ஊக்கமளியுங்கள்

குத்தாலத்தான் - பிரபாகர்

என் நண்பன் பிரபா,இந்த பதிவோட ஓனரும் இவர்தாங்க,செமயா மொக்க போடுவானுங்க,நீங்களே படித்து பாருங்களேன்

கொசு பிடிக்க spiderman!!!
பக்கத்துக்கு வீட்டு சண்டை !!

மனோ- A baby from coimbatore

கோவையில் இருக்கும் நண்பர்,பதிவர் மனோ

இவரின் டைரி குறிப்புகளையே நம்முடன் பகிர்பவர்,அத்தனையும் அருமையாக இருக்கும் நினைவுக் குறிப்புகள், நல்ல விமர்சகரும் கூட

இவரின்
சில பதிவுகள்

ஒரு காதலின் டைரி குறிப்புகள் - 6
நான் மகான் அல்ல - இசை விமர்சனம்

தமிழ் தலைமகன் - வில்சன்


இவர் தன் அனுபவங்களை நம்முடன் பகிரும் விதமே அற்புதமாக இருக்கும்,இவரையும் படித்துப் பாருங்கள்

கடலடியில் ஒரு தமிழன் (பாகம்-4)
கடவுள் இருக்கிறார்
இயந்திரப் பறவை - பாகம் 1


சிவதரிசன் - காரைத்தீவு

காரைத்தீவு என்ற தெரியாத ஊரிலிருந்து எழுதும் நண்பர்,விலங்குகளை பற்றிய அரிதான பதிவுகளை எழுதும் பதிவர்,இவர் பதிவுகள் சில

நீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா?

85ஆவது வயதில் விமான கறுப்பு பெட்டி'யின் தந்தை மரணம்

சில கடல்வாழ் உயிரினங்களும் அவற்றின் தனிச் சிறப்புக்களும்


மீண்டும் சந்திப்போம் !!!!

Saturday, July 24, 2010

பொடிப்பையனின் கவித !!!


 நாலஞ்சு நாளா யோசிச்சதுல என்ன பதிவு போடலாம்னு கடைசி வரைக்கும்  தோனல !
இன்னக்கி காலைல பழைய பொட்டிய நோன்டுனதுல கெடச்சுது பாருங்க ஒரு பேப்பர் !!
அட வேற ஒன்னுமில்லப்பா ஸ்கூல்ல படிக்கும்போது நான் எழுதுன கவித !
(அப்டின்னு நான் நேனைசுகிட்டு இருக்கேன் அது கவிதையா இல்ல அதுக்கு  வேற பேரான்னு நீங்கதான் சொல்லணும் )


புதிய பதிவில் தட்டச்சின் உதவியோடு பதிக்கிறேன் என் கவிதையை !

அழகான கவிதை
"அம்மா"
அழகான  உறவு
"நட்பு"


நெருப்பிலும் நிற்கலாம் 
நீரிலும் ஓடலாம் 
தரையிலும் மிதக்கலாம் 
வானிலும் பறக்கலாம் 
தோழனின் துணை இருந்தால் !

உயிர்தந்த கருவறையை நினைவிலயே கொண்டிரு 
உயிரற்று கல்லறை செல்லும்வரை

உன்னை  ஆளாக்கியவளுக்கு
உண்மையை இரு  !
சுமையாய் கருதி எமனாய் இராதே !


துன்பத்தில் தோல்தர 
இன்பத்தில் கலந்திர 
இரவு முழுக்க பேசிட
ஒன்றாய் உணுன்ன
ஒன்றாய் உறங்க 
அனைத்திலும் உடனிருந்த நீ 
என்னை தனியே விட்டுசென்றதேன் ?
மரணத்துடன் கைகோர்த்து !

இன்னும் அந்த வெள்ளைத்தாளில்
தெளிவாக தெரிகிறது
"என்ன மறந்துடு"
மச்சி இன்னொரு குவாட்டர் சொல்லுடா !!


மூன்றுசக்கர சைக்கிளில் விளம்பரம்
"புகையில்லா சென்னை"
ஓட்டும் தொழிலாளியின் கையில்
"கணேஷ் பீடி"


முற்றாது!

குற்றம் கூறினால்
திருத்திக்கொள்ள தயாராக
"குத்தாலத்தான்"

என்ன எல்லாம் தனி தனி வரில இருக்குன்னு நீங்க நெனச்சா ஒரு சின்ன தகவல்
அது பேர் கவிதை !!!
அட நம்புங்கப்பா !!

பொடிப்பையனின்  கவித சின்னத்துக்கு ஒட்டு போடுங்க
அதுக்கு பணம் தரணுமோ !!!!
சரி நல்லா இருந்தா !
உங்களுக்கு என்பதிவு புடிச்சா ஒட்டு போடுங்க
ஒட்டு போடுங்க
ஒட்டு போடுங்க 
என்று சொல்லி என் மொக்கையை நிறுத்திகொள்கிறேன் !!