Pages

Wednesday, October 13, 2010

அழிக்கப்படும் புராதனங்கள்- அரசுக்கு வேண்டுகோள்





சிதறாமல் அமர்வாரா ஜைனர்?

ஜைனர் புடைப்பு சிற்பங்கள் கொண்டஆளுருட்டி மலை
 
புதுக்கோட்டை மாவட்டமே, தொன்மையானது என்றால் அது மிகையாகாது. ஏனெனில், கற்கால மனிதர்கள் வாழும் குகைகள், புதை பொருள் தாளிகள், cane circle எனப்படும் கல் வளைவுகள், நடுகற்கள் ஆரம்பித்து, ஜைன குகைகள், புடைப்பு சிற்பங்கள், மூலிகை ஓவியங்கள், முதல் தமிழ் மூல எழுத்துக்களாம் பிராம்மி எழுத்துக்கள், முதல் காலச் சோழர்களின் கோயில் ஆகியவை நிரம்பிய, சித்தன்னவாசல், குடுமியான் மலை, நார்த்தாமலை, கடம்பர்மலை, ஆளுருட்டிமலை ஆகியவை நிரம்பிய பகுதி புதுக்கோட்டை. அந்தப் பெயர் இனி நிலைக்குமா என்பது சந்தேகமே. கடந்த சில மாதங்களாக மிக அதிகமாக கல் குவாரி காண்டிராக்டர்களால், அடி முடி காணாமல், தொல்லியல் துறையின் சட்டங்கள், தடுப்பு சட்டங்கள், (ban) ஆகியவை மதிக்கப் படாமல், இந்த காலத்தால் அழியாத புராதனச் சின்னங்கள் பெயர்ந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்நேரமும் அதிரும் குண்டுகளால், குகைகளும், நிற்கும் இடங்களும் மக்கள் நடமாடுகையிலேயே ஆட்டம் கொண்ட வண்ணம் உள்ளது. இப்படியே தொடர்ந்தால், மத்தியத் தொல்லியல் துறையால் காக்கப்படும் இச்சின்னங்களும் குவாரிக் கற்களாக இரையாகும் நாள் வெகுதூரமில்லை. மத்திய தொல்லியல் துறை அதிகாரிகளையும், அங்குள்ள காவலர்களையும் தொடர்பு கொண்ட போது, யாரிடம் முறையிட்டாலும், அரசியல் பலமிக்க கல் குவாரிக் காரர்களை தடுக்க முடியவில்லை என்று வருத்தமே தெரிவிக்கின்றனர். இனியும் தாமதியாமல், தமிழ் நாடு அரசு தொல்லியல் சின்னங்கள் உள்ள மலைகள் முழுவதையுமே காப்பதற்கான சட்டம் இயற்றி,(இல்லை இருக்கும் சட்டத்தை தூசி தட்டி எடுத்து) உடனேயே இந்த காலவரையற்ற குண்டுவெடிப்புகளை தடுக்காவிட்டால், தமிழகத்தின் தொன்மைக்குப் பெருமையாக விளங்கும் இச்சின்னங்கள் இனி புகைப்படங்களாக மட்டும் காணும் நிலை உருவாகிவிடும். அரசு உடனடியாக கவனிக்குமா?

வெடித்து வைக்கப்பட்டுள்ள கற்குவியல்கள்
 
தகர்க்கப்பட்ட கற்குவாரிகள் படுகைக்கு மிக அருகே
collr.tnpdk@nic.in மற்றும் collrpdk@tn.nic.in
 
மாபெரும் அழிப்பு நடவடிக்கையை நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு மின் அஞ்சல் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
வலைப்பதிவர்கள் அனைவரும் தங்கள் வலைப் பக்கங்களில் இதை மறு வெளியிடு  செய்து தருமாறும் அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன் 
ஆரூரன் விசுவநாதன்
 
நண்பர் ஆருரான் வேண்டுகோளுக்கு இணங்க மீள் பதிவு....
 
To
The Collector,
Pudukottai Dist.
 
Order immediatly to stop quarrying. Such a monument can not be built by present or future govt. Such monuments are telling poetry, history of geography of glorious past.

Sunday, October 10, 2010

சரக்கு அடிக்கலாம் வாங்க !

நம்ம பசங்க என்னக்கி சரக்கு அடிச்சாலும் ஒரு காரணம் இல்லாம அடிக்க மாட்டாங்க !
என் நண்பர்கள் சரக்கு அடித்த சில கரணங்கள் !!

*போன வருடம்  விபத்தில் இறந்த ஆந்திர முதல்வருக்காக சரக்கடிதனர் !

* நண்பன் 1 :மச்சி அவ திட்டிட்டா  டா....
நண்பன் 2 : சரி வா சரக்கடிக்கலாம் :)

*எங்க கல்லூரி முதல்வரின் தாயார் இறந்ததற்கு :(

*எங்க வகுப்புல ஒரு பத்து பேருக்கு அபராதம் போட்டதற்கு :|


*பாஸ் ஆனா சந்தோஷ சரக்கு இல்லனா  துக்க சரக்கு ..:)

*புது கைபேசி வாங்குனா சரக்கு தொலைஞ்சு போனாலும் தான் ...,


*பரிச்சை முடிஞ்சா சரக்கு ,


*வாரக் கடைசி  நாள் சரக்கு ,


* பிறந்தநாள் சரக்கு ,

*சளி புடிச்சாகூட சரக்கு  
கேட்டா ரம் அடிச்சா சளி போயிருமாம் :|


  இப்டி எவ்ளோவோ சொல்லிக்கிட்டு  போகலாம் ஆனா என்ன காரணத்துக்காக சரக்கு அடிச்சாலும் அவுனுங்க பேசறது இந்த விஷயம்தான் இருக்கும் !

*நீ ரொம்ப நல்லவன் டா மாப்ள :)  (வாங்கி தர மாட்டேன்னு சும்மா சொன்னதுக்கு வண்ட வண்டையா கேட்டியே  டா )

*டேய்  சரக்குல இருக்கேன்னு நெனைக்காத நானே வண்டி ஓட்டுறேன் :|(வேணாம் டா வண்டி என்னுது  :( )

*ஏன் மச்சி இன்னக்கி எவ்ளோ அடிச்சாலும் ஏற மாட்டுது (டேய் அவன் பக்கத்துல இருக்குற சோடா பாட்டல எடுரா நாய் சோடா மட்டும் குடிச்சுட்டு எரலன்னு மொக்க போடுது :)

*நான் போதைல ஒளர்ரெண்ணு நினைக்காத டா  எப்போதுமே போதைல இருக்குறவன் தான் உண்மைய பேசுவான்
(அய்யே சொல்லிடாரு அரிச்சந்திரன் தம்பி ! ஓடி போயிரு டா அடி வாங்கம )

*மச்சி இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும் டா !
(உங்க மாமனார் கடையா  மச்சி ! )

*மச்சி எடுத்துக்கோ என் உயிரே உனக்குத்தான், உனக்காக என்ன வேணும்னாலும் கொடுப்பேன் டா (நீ அடிச்ச சரக்குகே நான்தான் கொடுக்க போறேன் கொய்யால பேச்சை கொறடா வந்துடாரு அம்பானி பேரன் )

*மச்சி என்னடா இது சரக்கு, நாளைலேந்து சரக்கே அடிக்க கூடாது டா (அடப்பாவி போன வாரமும் இதத்தான சொன்ன )

*இருந்தாலும் அவ அப்டி சொல்லியிருக்க  கூடாது டா ! புடிகிலன்ன விட வேண்டியதுதான அசிங்க படுத்திட்டா மச்சி (டேய் நீ லவ் சொல்லி 3  வருஷம் ஆகுதுடா )


அதுவும் இவணுங்க அடிச்சிட்டு பண்ற அலும்பு இருக்கே தாங்க முடியாது ....
ஓம்லெட் போட்டுட்டு டார்ச்சர் பண்ணிருவானுங்க !
அவன் சந்தோசத்துக்கும் துக்கத்துக்கும் பக்கத்துல இருக்குரவந்தான்  கரணம் மாதிரி பேசுவானுங்க '
புதுசா வந்து சரக்கு அடிச்சுட்டு அதுவும் 2  கட்டிங் அடிச்சுட்டு  ஒரு புல் அடிச்சா மாதிரி  சீன் விடுவானுங்க  !

ஒன்னு நம்மளும் சரக்கு அடிக்கணும் இல்லனா சரக்கு அடிகிரவன் கூட போக கூடாது !

நம்ம நாட்ல நஷ்டம் இல்லாத வியாபாரம் சரக்கும் , கல்வியும்தான் ரெண்டுலயும் அள்ளுராங்க !
 







சரி நான் சரக்கு அடிக்க போறேன் !(போன பதிவுல யாருமே இண்ட்லில  ஓட்டுப்போடலை அதுக்காகதான் :(  )
அடுத்த பதிவுல பாப்போம் !

சரக்கு பத்தி பதிவு போட்டதும் படிச்சுட்டு கேளம்பிடதீங்க கமெண்ட் போடுங்க அப்புறம் இந்த பதிவு எல்லா குடிமக்களுக்கும் சேரனும் அதுக்காக வோட் போடுங்க :) அப்பத்தான் சந்தோசமா சரக்கு அடிக்க முடியும் !! :)