Pages

Thursday, September 2, 2010

என்னயா கல்வி ?

 அனைவருக்கும் என் வணக்கம் !
 இன்னக்கி  நான் கல்லூரி முடிஞ்சு வருகிறபோது   என்னை  மிகவும் பாதித்த ஒரு நிகழ்ச்சி   அதன் மூலமே இந்த பதிவு !

என்னவோ குழந்தை தொழிலாளிகளை ஒழிப்போம்ன்னு அறிக்கைலாம் விடுறாங்க tollfree  நம்பர்லாம் குடுக்குறாங்க
எந்த அளவுக்கு அதுல வேல நடக்குதுன்னு எனக்கு தெரியல எனக்கு இன்னக்கி பாத்த அந்த சம்பவத்த பொருக்க முடியல !!!

என்னடா இவன் சம்பவம் சம்பவம்ன்னு சொல்றானே என்ன சம்பவம்ன்னு ரொம்ப யோசிக்காதீங்க இதுதான் ........
கல்லூரி முடிஞ்சு வீடு திரும்போது பேருந்தை விட்டு இறங்கி பத்தடி வைத்திருப்பேன் ஒரு 13 இல்ல 14 வயசு இருக்கும் ஒரு சிறுவன் "அண்ணா ஆப்பிள் வேணுமான்னா ?"

ஒரு சிறிய சாலையோர பழக்கடை வழக்கம்போல் நானும் வேண்டாம் என்று சொல்லி நகர்ந்தேன் !
ஒரு நொடி திரும்பிய நான் கடையருகில் சென்று பார்த்தேன் அவனை பார்த்தால் தெளிவான சென்னை சிறுவன்
"காதில் கடுக்கனும் , முக்கால் டௌசரும் ,டி.ஷர்ட்டும் " அணிந்து ஏனென்று தெரியவில்லை அவனை கண்டதும் எதாவது வாங்க தோன்றியது அவனிடம் வாழைபழம் கேட்டுவிட்டு "என்ன படிக்கிறாய் என்று கேட்டேன் "
 அதற்கு  அவன் "இல்லன்னா நான் நிறுத்திட்டேன் !" என்றான் . ஏன் என்றேன் ? "இல்ல படிக்கல !" என்றான் .
எதனாலன்னு கேட்டேன் ? "நான் பள்ளிகூடதிர்க்கே போனதில்ல !" என்றான் ஒரு நொடி அதிர்ந்தேன் !

எனக்கு வார்த்தை வரவில்லை ! அங்கிருந்து என் உடல் மட்டும் நகன்றது .... மனதை விட்டு !
 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமாம் ?!
 எத்தனையோ பேர் கல்வி அமைப்பு ஆரம்பிக்கிறாங்க ஆனாலும் இந்த அவல நிலை ஏன் ?
எனக்கு யோசிக்க பொறுமையில்லை திட்டிதீர்த்துவிட்டேன் !

இலவச ஆரம்ப கல்வின்னு சொல்றாங்க ....
இலவச சாப்பாடுன்னு  சொல்றாங்க.....
இலவச சீருடை , நோட்டு புத்தகம்,செருப்பு ,முட்டை ,.
இவ்ளோ இருந்தும் இன்னும் இப்டி நிறைய பேர் இருக்காங்க !

இதுல்லாம் கொடுத்தா இன்னும் நிறைய பேர் படிக்க வருவாங்கன்னு நினைச்சேன் ...
ஆனா நம்ம ஆளுங்க என்னக்கி  சாப்பாடு போடுறாங்களோ அன்னகி மட்டும் போய் சாப்டு வராங்க ?!
சரி கொடுக்குறது தான் ஒழுங்கா கெடைக்குத இல்ல!
எங்க ஊர்ல முட்டைலாம் பக்கத்துக்கு கடைல விதுடுறாங்க !
எல்லா துறையும் இப்டிதானா ?
(எப்டி பாத்தாலும் அவுங்க குடும்பம் மட்டும் கோடிகள்ள வளருதே  ?)

இன்று உலகில் எல்லா மூலையிலும் கல்வி மட்டும் தான் நட்டமில்லா தொழில் !
சேவையை தொழிலாக்கி சிறுவனை கல்விக்குரடனாக்கியது யார் ?
எதாவது செய்யணும்ன்னு தோணுது என்ன செய்யறதுன்னு தெரியல !
எனக்கு அதெல்லாம் பத்தி ஆழமா ஒன்னும் தெரியாது ஆனா ஆதங்கத்த காட்ட முடியும் !
காட்டிட்டேன் !





இதுக்கு என்ன செய்யலாம்ன்னு ஒரு யோசனை சொல்லுங்க ?

Sunday, August 29, 2010

ட்விட்டலாம் வாங்க.. #குத்தாலத்தான்

இங்க முதல் முதலா நானும் பதிவெழுத போறேன்னு இருந்த சந்தோசம் இன்னும் எனக்கு குறையாம  இருக்க காரணமே நீங்க போடுற பின்னூட்டம்தான்  ...

அந்த பின்னூட்டம் எனக்குள்ள ரத்தஓட்டமா இருக்கு...
(ரொம்ப ஐஸ் வைக்கிற மாதிரி இருக்கா யோசிக்காதீங்க ஐஸ்தான் இதுக்காகவே நீங்க பின்னூட்டம் போடணும் பின்னாடி பக்கமா ஓடிராதீங்க !)
பின்னூட்டம் போடுற அனைவரும் இல்லனாலும் ஒரு இருபது பேர் பின்தொடரவும் செய்கிறார்கள் அது இரட்டிப்பு மகிழ்ச்சி எப்டி சொல்றது நம்ம சச்சின் சமீபத்துல போட்டாரே ரெட்டை சதம் ஒரே நல்ல இந்தியாவே சந்தோசபட்டுச்சே   அது மாதிரி !!!
(இதுக்கு ஜன்னியே வந்துருக்கணுமே !:))


என்ன தலைப்புல ட்விட்லாம்னு போட்டுட்டு இங்க மொக்க போடுறானேன்னு நினைகிறீங்க புரியுது !!
நான் ட்விட்டுனது மட்டும் போடுலாம்னு நினெச்சேன் இப்போ திட்டம் ஆ) செயல்படுத்தபடுகிறது .....

ஏன் ப்ளாக்ல ட்விட்ட கூடாது ?
அப்டின்னு தோனுச்சு அதான் ...

காலைல எந்துருச்சு பல்லு கூட வெளக்கமா இந்த டப்பா முன்னாடி உக்கார்றதுதான் இப்ப ட்ரெண்டு !
(பல்லு வெளக்காம இருக்குறத எப்டிலாம் சமாளிக்க வேண்டிருக்கு  )

உண்மைதான் நம்ம ஆளுங்க பாதிபேர் இப்டித்தான் இருக்காங்க ..
பேஸ்புக்கில் மொக்கை !
ட்விட்டரில் கொடூர மொக்கை !
அடுத்த லெவல் என்னன்னா
ஜி சாட்டில் பெர்சநெல் மொக்கை !
(ஏன்டா இப்டின்னு கேட்டா "இது கம்பிட்டர் டிசென் எச்போர்ட் குவாலிட்டி ன்னு " செந்தில் டோன் போடுறானுங்க )

ரெண்டு நாள் முன்னாடி   ட்வீட் மீட்ன்னு  அண்ணன் @ksawme ஒரு update போட்டார்  என்னன்னு தெளிவா புரியாட்டியும் ஒரு அளவுக்கு அவர் சொன்னது புரிஞ்சுது!! சரி போலாம்னு முடிவெடுத்துருக்கேன் !

அங்க என்ன நடந்துதுன்னு நாளக்கி  எழுதுறேன் இப்ப கொஞ்சம் மொக்க போடா போறேன் தயாரா இருங்க !~!

நேத்துதான் பாஸ் என்கிற பாஸ்கரன் ட்ரைலர் பாத்தேன் செம்ம சிரிப்பு டைரக்டர் நம்ம "சிவா மனுசுல சக்தி" படம் பன்னவர்தான் அது மாதிரியே சந்தானம் தாறு மாருப்பா ! அவர் ட்ரைலர்ல  சொல்லுவர் "நன்பேண்டா" ன்னு ஒரு டயலாக் .. செம செம ....
தரவிரக்கலாம்னு கூகுள்ல டைப் பண்ணா பாட்டு வந்துருச்சு !!
சரி ஒடனே அதையும் எறக்கி கேட்டேன்
யுவன் திரும்பவும் நம்மள திரும்ப வச்சிருக்கார் ..
அ) அட பாஸ்சு  பாஸ்சு .. பாட்டுதான் intro ன்னு நெனைக்கிறேன் ஹீரோவ பத்தி சொல்றாங்க
அதுவும் எங்க கும்பகோணத்துல எடுத்து இருக்காங்க படத்த !

ஆ) ஐலே ஐலே ... ன்னு அடுத்த பாட்டு
ஹீரோயின பாத்த ஹீரோ பாடுற பாட்டுன்னு தெளிவா தெரிது ... 

இ)மாமா  மாமா ... ன்னு ஒரு பாட்டு செம குத்து !
தாளம் போடா வைக்குது ..... இந்த பாட்டுல கும்பகோணம் அப்புறம் பக்கத்துக்கு ஊற பத்தியெல்லாம் வருது எப்டினா
கும்பகோணத்து வெத்தல, பட்டுகோட்டையில் பாக்கு ,தஞ்சாஊர் தவில்ன்னு ஆரம்பிச்சு கிளிச்சுருகாங்க ....

ஈ)தத்தி தாவும் பேப்பர் நான் .. ன்னு ஒரு பாட்டு வழக்கம் போல யுவன் பாடுற பாட்டு காதல் ஏக்கத்துல பாடுற மாதிரி இருக்கு  ...யுவன் பாடுனாலே எப்டி இருக்கும்ன்னு தெரியும் நல்லாத்தான் இருக்கு .....

கடைசியா ஒரு பீலிங் பாட்டு பாஸ் !!
உ) யாரிந்த பெண்தான் என்று கேட்டேன் .. ன்னு தொடங்குது காதல்ல உருகி பாடுறாங்க !!

மொத்தத்துல பாஸ் pass !!

அடுத்து ஒரு மேட்டர் ....
நேத்துதான் நான் மகான் அல்ல படம் பாத்தேன்
படம் சூப்பர்ன்னு சொல்ல முடியாது !!
பரவால்லன்னு  சொல்லலாம்  ...
முதல் பாதில கொஞ்சம் ஜாலியா இருக்கு அதுலயும் நான் தூங்கிட்டேன் கொஞ்சம் பாத்ததுல வழக்கமா கார்த்தி செய்யுற நக்கல்தான்ன்னு தெரிஞ்சுது !!
இதுல ஹீரோ குடும்பத்த நல்லா காட்டிருக்காங்க அதுக்கு ஒரு செம ...
ஹீரோ தங்கச்சி தாறு மாருப்பா வாய்ப்பே  இல்ல அடுத்த ஹீரோயின் ரெடின்னு கூட சொல்லலாம் ..
அப்பாவா நடிச்சவர் நல்லா பன்னிருகார் ...
அப்புறம் ரெண்டாம் பாதில விருவிருப்பா இருக்கு கடைசியா  சண்டை காட்சிகள் செம ...
ஆனா ஒரு மனநிறைவு வரல திடீர்ன்னு முடிஞ்சமாதிரி இருக்கு பாதிக்கு மேல ஹீரோயின் காண போய்டுறாங்க ...
அவ்ளோதான் சொல்லலாம் ம்ம் நம்ம யுவன் இசை செம ......
மாயாஜால்ல பாத்தேன் தியேட்டர் மொக்கதான் என்ன ஒரு பிளஸ்ன்னா எப்ப போனாலும் டிக்கெட் கிடைக்கும் ... 
(காதலியோட போறதுக்கு சரியான இடம்... )


நான் ட்விட்டுறது எல்லாம் பேஸ்புக்குளையும் போடுவேன் அதுக்கு என் நண்பர்கள் கொஞ்சம் நல்ல கமெண்ட்ஸ் குடுத்தாங்க
நீங்களும் சொல்லுங்க எப்டி இருக்குன்னு .......



அ)  
வாழ்கை முழுக்க வாழும் என்று நீ சொன்ன நம் காதல்
வார இறுதியில் முடியும் என எதிர்பாக்கவில்லை !

#ஒரு வார காதல்

ஆ) 
வார இறுதி நாட்களில் பூக்கும் பூக்கள் மட்டும் நரகத்திற்கு செல்கின்றன என் வீட்டில்
#அவளின் பள்ளி விடுமுறை

இ) 
பேருந்தில் பயணித்த உன்னை பின்தொடர்ந்த நான் ! 
அவனுடன் வாழ்கையில் பயணிக்கும்போது என் செய்வேன் ?
#வழியில் வலியுடன் பயணித்தேன்

ஈ) 
கவிதையின் முகவரி தொலைந்தால் 
    வாக்கியமெல்லாம் கவிதையாகும் !

உ ) 
 சிறுவயதில் வைத்ததாலோ என்னவோ தெரியவில்லை இன்னும் பூக்கவே இல்லை
#என் காதல்

ஊ) 
என் நட்பில் 
பாரம் இல்லை தூரம் இருந்தது !
பார்த்தாலும்... 
அரட்டை இல்லை அமைதி இருந்தது !
பேசினாலும் 
வெறுப்பு இல்லை மௌனம் இருந்தது !
என் காதலை கூறியபோதும்  
கடுப்பு இல்லை கையில் செருப்பு இருந்தது ! :)
(இது நம்ம ஜில்லு கேடான்னு எழுதுனது கடைசியா வேணாம்னு சொல்லிட்டான் ஆனா பேஸ்புக்கில் நல்ல கமெண்ட்ஸ் கிடைச்சுது )

எ) இரவில் எழுதுவதெல்லாம் கவிதை என்றால்
இன்று நான் எழுதிய கவிதை "நட்பு" 
#ஏக்கத்தில்
  

இதுக்கெல்லாம்  மட்டும் தான் கொஞ்சம் கமெண்ட்ஸ் கிடைச்சுது ......
அவ்ளோதான் ரொம்ப மொக்கயா இருந்தா விட்ருங்க உங்களுக்கு புடிச்சி இருந்தா பின்னூட்டம் இடுங்க ....
பின்னூட்டம் போடும் அனைவருக்கும் என் புகைப்படம் ஒன்று பரிசளிக்கப்படும் 
(பின்னூட்டமே வராதோ!!!!)     
இதுவரை இல்லைனாலும் பரவால்ல இப்போ கூட நீங்க பின்தொடரலாம் 
ஏன்னா எனக்கு ரொம்ப பெரிய  மனசு எல்லாரும் வாங்க !!!!