Pages

Saturday, July 10, 2010

வெளிச்சத்தில் நிழலும் மறையட்டுமே !!!

இந்த உலகத்துல எல்லாருக்குமே துக்கம் ,சந்தோசம் ,பிரச்சன இருக்கும் ...
என்னோட சில நண்பர்கள பாத்திருக்கேன் எனக்கு மட்டும் ஏன் இந்த கடவுள் இப்படி பண்றான்னு கேப்பாங்க....
இது என்ன பொறுத்த வரை தப்புனுதன் சொல்லுவேன்  ... அப்படி ஒர்த்தன் இருந்தானா உதவறதுக்கு  அவங்களுக்கு தெரியல. அத அவங்களுக்கு நான் புரிய வைக்க விரும்பல. ஆனா நாம ஒரு துக்கம் வந்தாலே அந்த ஆல ஏன் பாக்கணும் நமக்கு சமாளிக்க தெரியாதா !
வாழ்கைல சந்தோசம் மட்டும் வந்தா ஒரே நால்ல வாழ்கை வேருத்துடாதா  !
சந்தோசம் துக்கம் ரெண்டும்தான் வாழ்க்கைய வேகபடுத்துது   !
மனிதன் ஒரு தனி போராளி அவனோட ஒவ்வொரு கஷ்டத்தையும் அவன் தனியாத்தான் போராடுறான் !!!
ஏன் சொல்றேன்னா மனுஷன் கூட  எப்போதும் வர நிழல் கூட இருட்டுல வராது இந்த உலகத்துல ஒவ்வொரு மனுஷனுக்கு  துணை அவுங்களுகுல்லத்தான் இருக்கான்  ! 
இதுல மனிதனுக்கு  யார் உதவுரான்களோ அவங்கள நண்பர்கள்னு சொல்லலாம், ஆனா நேரமும் காலமும் நாம போராடறதுக்கு அவங்கள அனுபுரதிள்ள !!
இது அவங்க தப்பு இல்ல சூழ்நிலைதான் காரணம். மனிதனுக்கு  கடைசி வரைக்கும்  துணை மனிதன்தான் .
மனுஷன் நெருப்புல போறப்ப கூட தனியாதான் போகணும் !


ஏதோ மனுஷன துன்பம் துரத்துன்னு சொல்வாங்க இல்ல உண்மையா நாள் ஆக ஆக  மனுஷனோட துன்பம்  கொறையுது ! எந்த கஷ்டமும் வளர்ரதிள்ள புதையுது!
இதுக்கு ஏன் நம்ம கவலை படனும் கஷ்டத்தையும் சந்தோசத்தையும் சந்திக்கரதுக்கு தயாரா   இருப்போம்
ரெண்டுல எது வந்தாலும் பாத்துக்கலாம், போராடலாம்  !
மனுஷன் எப்போதும் ஒரே மாதிரி இல்ல துன்பதுக்காகவும் சந்தோசத்துக்காகவும் அவன அவன் மாத்திகிறான்.
திரும்பவும் சொல்றேன் மாற்றம் மட்டும் தான் மாறாம இருக்கும் .


இந்த ரெண்டயுமே சமாளிக்கத்தான் முனுஷன் !!சமாளிக்க முடியும் கண்டிப்பா ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் தனித்திறமை இருக்கு ..

எந்த ஒரு ஏற்றத்தையும் எரகதையும் சமாளிக்க கிளம்பலாம் போரடுலாம் ஜெய்க்க்லாம் .....

No comments: