Pages

Sunday, October 10, 2010

சரக்கு அடிக்கலாம் வாங்க !

நம்ம பசங்க என்னக்கி சரக்கு அடிச்சாலும் ஒரு காரணம் இல்லாம அடிக்க மாட்டாங்க !
என் நண்பர்கள் சரக்கு அடித்த சில கரணங்கள் !!

*போன வருடம்  விபத்தில் இறந்த ஆந்திர முதல்வருக்காக சரக்கடிதனர் !

* நண்பன் 1 :மச்சி அவ திட்டிட்டா  டா....
நண்பன் 2 : சரி வா சரக்கடிக்கலாம் :)

*எங்க கல்லூரி முதல்வரின் தாயார் இறந்ததற்கு :(

*எங்க வகுப்புல ஒரு பத்து பேருக்கு அபராதம் போட்டதற்கு :|


*பாஸ் ஆனா சந்தோஷ சரக்கு இல்லனா  துக்க சரக்கு ..:)

*புது கைபேசி வாங்குனா சரக்கு தொலைஞ்சு போனாலும் தான் ...,


*பரிச்சை முடிஞ்சா சரக்கு ,


*வாரக் கடைசி  நாள் சரக்கு ,


* பிறந்தநாள் சரக்கு ,

*சளி புடிச்சாகூட சரக்கு  
கேட்டா ரம் அடிச்சா சளி போயிருமாம் :|


  இப்டி எவ்ளோவோ சொல்லிக்கிட்டு  போகலாம் ஆனா என்ன காரணத்துக்காக சரக்கு அடிச்சாலும் அவுனுங்க பேசறது இந்த விஷயம்தான் இருக்கும் !

*நீ ரொம்ப நல்லவன் டா மாப்ள :)  (வாங்கி தர மாட்டேன்னு சும்மா சொன்னதுக்கு வண்ட வண்டையா கேட்டியே  டா )

*டேய்  சரக்குல இருக்கேன்னு நெனைக்காத நானே வண்டி ஓட்டுறேன் :|(வேணாம் டா வண்டி என்னுது  :( )

*ஏன் மச்சி இன்னக்கி எவ்ளோ அடிச்சாலும் ஏற மாட்டுது (டேய் அவன் பக்கத்துல இருக்குற சோடா பாட்டல எடுரா நாய் சோடா மட்டும் குடிச்சுட்டு எரலன்னு மொக்க போடுது :)

*நான் போதைல ஒளர்ரெண்ணு நினைக்காத டா  எப்போதுமே போதைல இருக்குறவன் தான் உண்மைய பேசுவான்
(அய்யே சொல்லிடாரு அரிச்சந்திரன் தம்பி ! ஓடி போயிரு டா அடி வாங்கம )

*மச்சி இன்னொரு பெக் அடிச்சா செமையா இருக்கும் டா !
(உங்க மாமனார் கடையா  மச்சி ! )

*மச்சி எடுத்துக்கோ என் உயிரே உனக்குத்தான், உனக்காக என்ன வேணும்னாலும் கொடுப்பேன் டா (நீ அடிச்ச சரக்குகே நான்தான் கொடுக்க போறேன் கொய்யால பேச்சை கொறடா வந்துடாரு அம்பானி பேரன் )

*மச்சி என்னடா இது சரக்கு, நாளைலேந்து சரக்கே அடிக்க கூடாது டா (அடப்பாவி போன வாரமும் இதத்தான சொன்ன )

*இருந்தாலும் அவ அப்டி சொல்லியிருக்க  கூடாது டா ! புடிகிலன்ன விட வேண்டியதுதான அசிங்க படுத்திட்டா மச்சி (டேய் நீ லவ் சொல்லி 3  வருஷம் ஆகுதுடா )


அதுவும் இவணுங்க அடிச்சிட்டு பண்ற அலும்பு இருக்கே தாங்க முடியாது ....
ஓம்லெட் போட்டுட்டு டார்ச்சர் பண்ணிருவானுங்க !
அவன் சந்தோசத்துக்கும் துக்கத்துக்கும் பக்கத்துல இருக்குரவந்தான்  கரணம் மாதிரி பேசுவானுங்க '
புதுசா வந்து சரக்கு அடிச்சுட்டு அதுவும் 2  கட்டிங் அடிச்சுட்டு  ஒரு புல் அடிச்சா மாதிரி  சீன் விடுவானுங்க  !

ஒன்னு நம்மளும் சரக்கு அடிக்கணும் இல்லனா சரக்கு அடிகிரவன் கூட போக கூடாது !

நம்ம நாட்ல நஷ்டம் இல்லாத வியாபாரம் சரக்கும் , கல்வியும்தான் ரெண்டுலயும் அள்ளுராங்க !
 







சரி நான் சரக்கு அடிக்க போறேன் !(போன பதிவுல யாருமே இண்ட்லில  ஓட்டுப்போடலை அதுக்காகதான் :(  )
அடுத்த பதிவுல பாப்போம் !

சரக்கு பத்தி பதிவு போட்டதும் படிச்சுட்டு கேளம்பிடதீங்க கமெண்ட் போடுங்க அப்புறம் இந்த பதிவு எல்லா குடிமக்களுக்கும் சேரனும் அதுக்காக வோட் போடுங்க :) அப்பத்தான் சந்தோசமா சரக்கு அடிக்க முடியும் !! :)

15 comments:

எஸ்.கே said...

ஜாலியான பதிவிலே சமூக கருத்தெல்லாம் சொல்லியிருக்கீங்க //நம்ம நாட்ல நஷ்டம் இல்லாத வியாபாரம் சரக்கும் , கல்வியும்தான் ரெண்டுலயும் அள்ளுராங்க !// :-)
எப்படியோ நல்லாவே இருந்தது!

Unknown said...

@எஸ்.கே
வருகைக்கு நன்றி ! :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்...

ஜில்தண்ணி said...

EPDIYO MACHI TWITTERA VECHI POSTA OTTIKITTU IRUKKOM NAAMA :)

பனித்துளி சங்கர் said...

////நம்ம நாட்ல நஷ்டம் இல்லாத வியாபாரம் சரக்கும் , கல்வியும்தான் ரெண்டுலயும் அள்ளுராங்க !
/////////

சரியாக சொல்லி இருக்கிறீர்கள் . இதை நான் ஏற்றுக்கொள்கிறேன்

Unknown said...

@வெறும்பய
முழுசாவே இருக்கு மச்சி !
உனக்கு இல்லாததா ?

Unknown said...

@ஜில்தண்ணி - யோகேஷ்

நன்றி தல !
நம்புரவரை நம்ம ராஜா !!

Unknown said...

@பனித்துளி சங்கர்
நன்றி தல !

கவி அழகன் said...

சுப்பர் மச்சி

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

சரக்கு ல சமூக கருத்து சொல்லுரவரா நீங்க..!
நம்ம கடைக்கும் வந்துட்டு போங்க..!
அன்புடன்,
http://vetripages.blogspot.com/

MANO நாஞ்சில் மனோ said...

நீங்க இருக்குறது குற்றாலத்துலையா??? அங்கே சிலு சிலுன்னு அடிக்கிற சில்லு காற்றில் சரக்கடிச்சா........எப்பூடி இருக்கும்........??? அனுபவிங்க ராசா அனுபவிங்க....

Unknown said...

@நாஞ்சில் மனோ

வருகைக்கு நன்றி !
குற்றாலம் இல்ல தல ! குத்தாலம் நாகை மாவட்டம் கும்பகோணம் பக்கத்துல இருக்கு :)

Unknown said...

@♥♪•வெற்றி - VETRI•♪♥


வருகைக்கு நன்றி !

Unknown said...

@♥♪•வெற்றி - VETRI•♪♥


வருகைக்கு நன்றி !

Unknown said...

@யாதவன்
தேங்க்ஸ் மச்சி ! :)
ஒரு குவாட்டர் சொல்லேன் :)